Friday, November 27, 2015

எனதில்லை...

எழுத்திலொன்றும்
எண்ணத்திலொன்றும்
எனக்கில்லை...

வார்த்தையிலொன்றும்
வாழ்க்கையொன்றுமென்பது
எனதில்லை...

சொல்லுவதொன்றும்
செயலிலொன்றுமென‌
பழக்கமில்லை...

ஆனாலும் இவையெல்லாம்
என் வாழ்தலின் இருப்பை
தட்டிப்பார்த்து
அவர்களிடமிருந்து
தள்ளியே வைத்துவிட்டது!!




No comments: