Wednesday, May 15, 2013

கானலென்று...





மனித வெடிகுண்டுகளால்
தகர்க்கப்பட்ட இதயமிது...

வலிகளனைத்தையும் தாங்கிய
வைரம் பாய்ந்த இதயமிது...

பாலைவனத்து மழைத்துளியாய் அந்த‌
ஒற்றைப்புன்னகை துளிர்த்தபோதுதான்
வலியாக உணர்த்தப்பட்டது...

அந்த ஒவ்வொரு துளியும்
விஷந்தடவிய கானலென்று!!

No comments: