Wednesday, April 17, 2013

தார்மீகமெனக்கு புரியவேயில்லை


ஆழ்ந்த உறக்கத்தில்
அலறித்துடித்த பேய்க்கனவு போல‌
அந்த வலி...

எத்தனை அநுபவக்கோடுகளின்
எல்லைகளை சந்தித்தும்
எனதான கோலத்தினை
பூரணப்படுத்த முடியவில்லை...

நம்பிக்கை என்பது
என தகராதியில் மட்டும்
தோல்வியென்றே பொருள்படுகின்றது...

உங்கள் கணக்குகளில்
வரவுகள் மட்டும்
பெறுமதியாய்த் தெரிய‌
உறவுகளை கழித்தல்புள்ளியில்
கலையப்பட்டுக்கொண்டிருப்பதின்
தார்மீகமெனக்கு புரியவேயில்லை...

எதனை அடைந்துகொள்வதற்கு
இத்தனை வேகம்?

அன்பை தள்ளிவைத்து
அத்தனையும் ஈட்டிக்கொண்டபின்
இழந்ததை எப்படிச் சம்பாதிப்பீர்?

நிம்மதியை அடகுவைத்து
நீவீர்பெற்ற இன்பங்களை
எக் கண்ணாடிக்குவளையிலிட்டு
அழகு பார்ப்பீர்?

உங்கள் அடிமட்டத்து
அறிவு கண்டு என்னால்
அழமட்டுமே முடிகின்றது?!!

No comments: