Friday, April 19, 2013

பதாதையிடுங்கள்!!



திருமணங்கள் புரிந்திட‌
இருமணங்கள் வேண்டியதில்லை
பெரும்பணங்கள் பொழிந்திடும்
வரும்படிக ளுண்டென்றால்
மட்டும் போதும் -இதுவும்
வாழ்க்கைதந்த பிரம்படிதான் -நல்ல‌
படிப்பினைதான்...

காதலின் எல்லைகளை
கல்யாணத்தில் முடிச்சிட‌
காலம் பார்த்திருந்த தருணங்களவை...

விருப்பங்களை பொறுப்பெடுத்தவர்களின்
பொறுப்பான நெருப்புக்களிவை
ஒவ்வொன்றாய் கேட்கப்பட்டது காதல்
ஒன்றுக்கும் பதிலில்லாது தீட்டுப்பட்டது...

பட்டங்கள் ஏதேனும் பெயருக்கு
பக்கத்திலுண்டா?

அரசாங்க அதிகாரியா -உமக்கு
வரும்படி வசதியாயிருக்கின்றதா?

சீர் சினத்திக்கொன்றும் குறையில்லையே?

தாம்பூலம் மாற்ற தடையில்லையே?

ஆங்கிலமெல்லாம் அசாத்தியமாய்
வந்துவிழ வேண்டும் என்ற‌
வரிசைக்கசையடியை
விழாத குறையாய் காதில்
வாங்கி பத்திரப்படுத்தப்பட்டது...

இல்லாத ஒவ்வொன்றுக்குமாய்
இருக்கு மந்த அழகிய ஒன்று
இருந்த இடமே இல்லாதழிந்திடுமா
இறைவா இதுதான் நியதியா??

ஏனோ
அநியாயமாய் ஓருன்னதம்
புதைத்தொழிக்கப்படுகின்றது
புனிதமென்று பேசப்பட்ட காதலுக்கு
புதைகுழி தோண்டப்படுகின்றது
நேசத்தில் பிணைக்கப்பட்ட ஓர் உயரிதம்
கொஞ்சங்கொஞ்சமாய் உருக்குலைக்கப்படுகின்றது...

இனியெவரும் உரைக்காதீர்
காதல் வெறும் அன்பென்று..

தகுதி
தராதரம்
அந்தஸ்து
பட்டம்
பதவியென்று
பகடைகளால் கோர்க்கப்பட்ட‌
பகட்டு என்று பதாதையிடுங்கள்!!




No comments: