குளியலறைச் சுவர்களுக்கு மட்டுமெ
முழுமையாய்த் தெரிந்த -என்
துக்கங்கள்...
தண்ணீர்க் கரங்கொண்டு
கண்ணீர்க் கழுவிடும் -அந்த
நீர்க் குழாய் இவை
நீயறிந்திடாத என் மறுபக்கம்....
தீனி கண்ட காகம்போல
கூவி அறிவிக்காத என்
ரணங்கள்
இப்போதும் நீ நம்புவதைப்போல
வெறும் புன்னகை மட்டுந்தான்...
ஆறுதலுக்காக
அடுத்தவரிலென் சுமையிறக்க
விரும்பாதவள் நானென்பதை
நீயறிந்திட வாய்ப்பில்லைதான்...
மகிழ்வுகளை மட்டுமே -நீ
விரும்பிடுவதால்!!
No comments:
Post a Comment