Monday, May 30, 2016

ஒரு கதை..... காதல்..... உண்மை காதல்


காதலர்கள் ( அப்படித்தான் சொன்னார்கள்) அவர்களின் திருமணம் பற்றி, காதலனின் வீட்டில் கதைக்கத்தொடங்கிய சந்தர்ப்பம்.

காதலனின் வீட்டாரில் ஒருவர் காதலியை சந்தித்துபேசவருகிறார்கள்.

வீட்டவர்: நீங்க என்னம்மா பசிச்சிருக்கீங்க?

காதலி: க.பொ.த உ/த

வீட்டவர்: தம்பி டிகிரி எல்லாம் முடிச்சிட்டாரே, நீங்க.....

காதலி: நானும் இப்ப படிக்கலாமென்று தொடங்கியிருக்கன்.

வீட்டவர்: ம்..... இங்கிலீஸ் கதைப்பீங்களா????

காதலி: கொஞ்சம் கதைப்பன் கிளாஸ் போகனும் சீக்கிரம் கதைக்க படிச்சிருவன்.

வீட்டவர்: ஓ.... எங்க வீட்ட எல்லாரும் இங்கிலீஸ் ல தான் கதைப்பம்.

காதலி: ..........

வீட்டவர்: நீங்க செய்றது அரசாங்க உத்தியோகமா?

காதலி: இல்ல தனியார் நிறுவனத்திலதான் வேலை...

வீட்டவர்: ஓ.. அரசாங்க வேலைக்கு ட்ரை பண்ணுங்க நல்லம்தானே...

காதலி: ம்

வீட்டவர்: உங்க சம்பளத்தில என்ன செய்வீங்க? இவ்வளவு நாளில நல்ல சேமிப்பு இருக்கும் தானே....

காதலி: இல்ல.... வீட்டு செலவில பாதி நான்தான். சேமிப்பு பெரிசா இல்ல இனி கொஞ்சங்கொஞ்சமா சேமிக்கனும்.

வீட்டார்: நீங்க ப்யூட்டி பாலருக்கெல்லாம் போகமாட்டிங்களா.... ஐப்ரோ ஷேப் பண்ணினா நல்லாயிருப்பீங்க தானே....

காதலி: ஹீ...... பழக்கமில்ல பார்ப்பம் அதையும் பழகிக்கொள்ளனும்...

வீட்டார்: சரி... அப்ப நான் வாரன் சந்திப்போம் நானும் வீட்டாக்களோட கதைச்சிட்டு உங்க வீட்டுக்கு வாரம்.

காதலி: ஓகே...

வாரங்கள் மாதங்களானபின் காதலன் வீட்டாரிடமிருந்து கடிதம் வந்தது....... காதலனின் திருமண அழைப்பிதலாக.

(இதுக்கு நான் என்ன ‪#‎கருத்து‬ சொல்லலாமென‪#‎யோசித்துகொண்டிருக்கிறேன்‬. நீங்க இதுபற்றி என்ன‪#‎நினைக்கிறீங்க‬ நட்புக்களே)

இது வெறும் கற்பனை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அல்ல‌
.
.
.
நிஜம்.




Like

No comments: