Monday, May 9, 2016

09/ 05/ 2016

http://www.oodaru.com/?p=10000

தீயிட்டு கொளுத்துவோம்..

   

-த.ராஜ்சுகா -இலங்கை
 
பெண்பிள்ளையினை
படுக்கை பொருளாய் பார்க்கும்
பாவியின் கண்கள் பறித்து
பருந்துக்கு விருந்திடுவோம்….
 
தனிமையின் அலங்காரத்தை
தீனியாக்கி கொள்ள வெண்ணும்
தீயோர் கரமெடுத்து
தீயிட்டு கொளுத்துவோம்…..
 
குழந்தையின் அழகைகூட
குரூரத்தனமாய் ரசிக்கும்
கயவர்தம் கழுத்தை நெரித்து
கல்லறை வாசலை காட்டிடுவோம்…
 
பேதையரெம் பாதுகாப்புக்காய்
வேங்கையென எழுவோம்
போதையாய் எமைநோக்கும்
போக்கிரிகளை எதிர்ப்போம்…..
 
மாந்தரெங்கள் மகிமையுணர்த்த
மணிமாலையாக இணைவோம்
மாண்டுகிடக்கும் சட்டங்களுக்கு
மருந்தளித்து உயிரூட்டுவோம்..

No comments: