Monday, April 25, 2016

வழங்கிய தெவரோ.....

கொல்லும் நினைவுகளை
தந்தது யாரோ
சுள்ளிடும் அனலலை
வழங்கிய தெவரோ.....

மௌனம் காத்து
வதைப்பது எவரோ
மொழிகள் விழுங்கி
சிதைப்ப தாரோ....

புன்னகை கடலை
மறித்தது யாரோ
புயலென மனதை
அரித்த தெவரோ......

அடிக்கடி நினைவில்
வருவது எவரோ
அடிமனதில் நிலையாய்
நிற்பது மாரோ.....

விதியை காட்டி
மறைவது யாரோ
சதியாய் வலையை
வீசியதும் நீயோ......

No comments: