Thursday, April 14, 2016

என் எல்லா பேரூந்து பயணங்களிலும்..10 April 2013

என் எல்லா பேரூந்து பயணங்களிலும்
வேடிக்கைக்கு முதலிடம் -இன்றோ
எண்ணங்கள்
எண்ணையில் விழுந்த நீராய்
எதிலும் ஒட்டாமல்
வெறிச்சோடிக்கிடக்கின்றது...
வெளியில் நடந்திடு மெதுவும்
விழியினீர்ப்பை வதைக்கவில்லை
அழகான பெண்கள்
அலங்காரமான ஆடைகள்
நாகரிக கோலங்கள்
நளினமான காதலர்கள்
பக்கத்தில் வந்தமர்ந்த‌
பளிச்சென்ற அந்தப் பையன்
வியாபித்த வாகனநெரிசல்
விதவிதமான கடைத்தெருக்கள்
வளர்ச்சிகண்ட கட்டிடங்கள்
வனப்பு மாறாத புதுமைகளென்று
எதிலும் சிந்தை கலையவில்லை...
ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில்
இதயத்தை அழுத்தமாய் தைத்த‌
அந்த‌ வார்த்தை -புத்தி
பேதலித்து நிற்குமந்த மனிதர்
என்னை இயங்கவிடாது தடுத்துக்கொண்டிருந்தது
இவர் முன்பு பெரிய ஆசிரியராம்
மனைவி விட்டுவிட்டு போயிட்டாளாம்!!!

No comments: