Thursday, April 28, 2016

உனக்குத்தெரியாது

உனக்குத்தெரியாது -என்
வானத்தின் ஓட்டைகளை...

மழைக்காலங்களில்
பட்டினியை மறைக்கவும்
ஓட்டையை மறைக்கவும் -நான்
திராணியற்று விழுகையில்
உதவிக்கு ஓடிவருவது
நித்திரையொன்றுதான்....

வந்தாலும்
ஈரமான பாயினைகண்டு அதுவும்
ஒதுங்கிக்கொள்ள‌

கருமையான இரவு
பகல்களாகி விடுகின்றன‌
விடியல் மட்டும் தென்படுவதேயில்லை....!!



No comments: