Thursday, April 14, 2016

09.04.2016 அன்று கனகேஸ்வரன் அவர்களின் துளிர்" கவிதை நூல் வெளியீட்டில்

09.04.2016 அன்று மலையக மண்ணின் வளர்ந்துவரும் இளம் கவிஞரான KG என அழைக்கப்படும் கனகேஸ்வரன் அவர்களின் கன்னி வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

" துளிர்" கவிதை நூல் செல்லமுத்து வெளிட்டகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புப் பிரதியினை பெற்றுக்கொண்டதுடன் சிறப்புப்பிரதியினை வழங்கவும் எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

பல கலைஞர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்த நிகழ்வில், மலையகத்தின் வளர்ந்துவரும் ஓர் முயற்சியாளர் என்ற ரீதியில் எனக்கும் அவ்வாறான கௌரவம் தந்து மதித்தமை மகிழ்வான தருணமாக இருந்தது.

எனது மண்ணில் இவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தை வழங்கிய செல்லமுத்து வெளியீட்டகத்தின் தலைவர் கவிஞர் யோ.புரட்சி அவர்களுக்கும் " துளிர்"கவிஞர் கனகேஸ்வரன் அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.







No comments: