Tuesday, March 11, 2014

பாசங்களை திரும்பிப்பாருங்கள்..

பொங்கியெழுகிறது
பொறுக்காத எனதுள்ளம்
தங்கிவாழ்ந்ததாய் இன்று
தப்பட்டமடிக்கிறாய்

ஒன்றே உலகஜெயமென்றால்
அதுவே அன்பென்கின்றேன்
உன்னிடமதுவன்றேல்
உனதுயிரெதற்கு உனக்கிந்த‌
ஊணெதற்கு??

இட‌துகையறியா தருமம்
வரங்களில் பெரிதென்பர்
இடமறியாத தையறிவித்து
இழிநிலையடைந்தாய் பேதயே

கூடப்பிறந்தவனானவன் உனதுதிரம்
கூசாமல் சோறுபோட்டதை போட்டுடைக்கிறாய்
கேடுகெட்ட உள்ளங்கள் இப்படித்தான்
கேவலமாய் உலவுகின்றதோ...

ஒன்றை உணர்ந்தேன் உலகில்
செய்ந‌ன்றி மறப்பது அபத்தமோ
செய்தலை நினைத்தலும் அதுவே
பாசங்களை திரும்பிப்பாருங்கள்
பணத்துக்குப் பின்னே ஓடுவதைவிட்டு...!!










No comments: