Friday, March 21, 2014

ஊடறு இணைய இதழில் எனது கவிதை 18.03.2014




கட‌ந்த காலங்கள் ஒரு
காவியக்காலந்தான் -அதில்
நட‌ந்த பாதையிலே சில‌
நாவிழந்த மொழிகள்தான்
விழுத்திய தருணங்கள்
கொளுத்திய அனல்களில்
அழிந்துபோன அன்றாடங்கள்
மீண்டும் ஒரு பொற்காலம்
மீண்டு வருமென்றோரெண்ணம்
ஆண்டுகொண்டிருக்கின்றது -என்னை
ஆளவைத்துக்கொண்டிருக்கிறது
என்னைமட்டுமல்ல தோழர்களே
உங்களையும் தான்
நிமிர்ந்து பாருங்கள் நாளை
நாமும் ஜெயிப்போம்!!


No comments: