Tuesday, March 25, 2014

ஊடறு இணைய இதழில்.... (29.03.2014) சாதிக்கட்டும் கண்ணீரும்!

வெளிச்சத்தில் திரைவிழ‌
வேதனை ஒளிபரப்ப‌
வெறுமை சூழ்ந்துவிட்டது -நீ
வெறுத்தொதுக்கி விலகியதால்

கொஞ்சம் திரும்பிப்பார்
நீ காணத்தவறியது
அன்பென்பதின் அடையாளங்களை
ஏழை இதயத்தின்
வெண்மைகளை

இனியிங்கே
புற்கள் முளைப்பதில்லை
பூக்கள் மட்டுந்தான்
வெற்றிகளுக்கு
கொக்கரிக்கமுடியுமென்றால்
தோல்விகளுக்கு
சாதுவாய் சாதிக்கவும் முடியும்

இனி தோல்விகள்
கண்ணீர் வடிப்பதில்லை
துணிந்து எழுந்திடும்

இனி வேதனைகள்
வியாதியாய் நெருக்குவதில்லை
விதிகளோடு விளையாடும்

இனி துரோகத்தின் வலிகள்
துவண்டு வீழ்வதில்லை
தூக்கி நிமிர்த்திடும் உலகை
வாங்கி ஜெயித்திடும்

சாதிக்கட்டும் கண்ணீரும்
சாதிக்கட்டும்

எத்தனை காலத்துக்கு
கண்களுக்கு வெறும்
கண்ணீரையே அறிமுகப்படுத்துவது காணாக்
காட்சிகளையும் அடையாளப்படுத்துவோம்
வையம் பெரிதென்பதையும்
சாட்சியாக்குவோம்




No comments: