Monday, December 21, 2015

கல்குடா நேசனின் விருது பற்றிய வாழ்த்துரை (21.12.2015)

http://kalkudahnation.com/




தடாகத்தின் விருது பெற்ற கல்குடா நேசனின் இணையக்குழுவின் ஓட்டமாவடி றியாஸ், கவிதாயினி ராஜ் சுகா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்-கல்குடா நேசன் iகடந்த 15.12.2015ம் திகதியன்று மாலை 4.30 மணிக்கு திருகோணமலை சன்ஷைன் (Sun Shine) மண்டபத்தில் தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம் இணைந்து நடாத்திய விருது வழங்கும் விழாவில் கலைமணி விருது பெற்ற கல்குடா நேசனின் இலக்கியத்துறை சர்வதேசத் தொடர்பாளர் கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களுக்கும், கவியருவி விருது பெற்ற கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் பகுதிப் பொறுப்பாளர் கவிதாயினி த.ராஜ் சுகா (த. எலிசபத்) அவர்களுக்கும் கல்குடா நேசன் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

அத்துடன், கலை இலக்கியப் பயணத்தில் தொடர்ந்தும் பயணித்து இலக்கியத்துறைக்கு பங்காற்ற வேண்டுமென்றும் பல வெற்றிகளையும், விருதுகளையும் பெற வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன், கல்குடா நேசனின் வெற்றியிலும் வளர்ச்சியிலும் பங்கெடுத்துள்ள அவர்கள் இருவரையும் வாழ்த்துவதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகின்றது.  







http://kalkudahnation.com/


எனது நன்றியுரையினை பிரசுரித்த கல்குடா நேசன் இணையத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்
*****************************************************************************


வளர்ந்து வரும் இளையவர்களை ஊக்கப்படுத்துமுகமாக எனக்கு வழங்கப்பட்ட விருதுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்-கவிதாயினி த.ராஜ் சுகா கடந்த 15.12.2015ம் திகதியன்று மாலை 4.30 மணிக்கு திருகோணமலை சன்ஷைன் (Sun Shine) மண்டபத்தில் தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம் இணைந்து நடாத்திய விருது வழங்கும் விழாவில் மலேசிய நாட்டு எழுத்தாளர்கள் 36 பேர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும். இவ்விழாவில் இலங்கை மலேசிய படைப்பாளிகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். அந்த வரிசையில் எனது பெயரும் இடம்பெற்றது ஆச்சரியமாக இருந்தது. வளர்ந்து வரும் இளையவர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அவர்களுக்கு கைகொடுத்து வளர்த்து விடும் உயரிய சிந்தனையாலும், தெரிவானவர்களில் எனக்கும் இவ்விருது கிடைக்கப்பெற்றது. உண்மையில் விருது பெருமளவுக்கு நான் எதனையும் செய்து விடவில்லை என நான் சொல்லத்தேவையில்லை. நீங்கள் யாவரும் அறிவீர்கள். எனது எழுத்துக்களையும், நான் முன்னெடுக்கும் சில இலக்கிய முயற்சிகளையும் ஊக்கப்படுத்துமுகமாக தந்த இவ்விருதிற்காக எனது மனப்பூர்வமான நன்றியினை தடாகம் கலை இலக்கிய வட்டத்திற்கும் அதன் அமைப்பாளர் உட்பட அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். விருது பெற்று விட்டாதால் நான் பெரிய இலக்கியவாதியுமல்ல. இதனால் நான் என்னை பெரியவளாகக் காட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை. வாசகர்களிடமிருந்து வரும் விமர்சனங்களையே ஒரு படைப்பாளிக்கான சிறந்த அங்கீகாரம் என்பது எனது தனிப்பட்ட கொள்கை. மாணவனை ஆசிரியர் பாராட்டும் போது கிடைக்கும் பூரிப்பையும் இன்னும் படிக்க வேண்டுமென்று அவனுக்குள் உருவாகும் புதுத்தெளிவையும் வேகத்தையும் தந்து விடும் அநுபவமாக இவ்விருதினை மகிழ்வோடு பெற்றுக்கொண்டேன். இவ்விருதுக்கு தகுதியானவளாக இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள முயற்சித்தவளாக என் மனப்பூர்வமான நன்றிப்பூக்களை இக்குழுவுக்கு தெரிவிப்பதில் பெறுமைப்படுகின்றேன்.




No comments: