Friday, December 4, 2015

கவிஞர் கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்-நேர்காணல் (04.12.2015)


http://kalkudahnation.com/





பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 04.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 17வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் கவிஞர் கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள். “சமூகத்தில் நடக்கும் தீமைகளைச் சுட்டிக்காட்டி சமூகக்கண்களைக் கலங்க வைக்கக்கூடிய, இதயங்களோடு பேசக்கூடிய கவிதைகள் தான் தேவை, குரல் வடிவம் கொடுக்கப்படும் கவிதைகள் இதயங்களோடு பேச இலகு வழியாக அமையும். அப்படிப்பட்ட படைப்புகளை கவிஞர்கள் சமூகத்திற்குத் தர வேண்டும்” என்ற வேண்டுகோள்களுடனும் இன்னும் பல சுவாரஸ்யங்களோடும் இணைந்து கொள்கின்றார் கவிஞர். 


01.இளம் படைப்பாளியான நீங்கள் எமது இணையத்துடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி. உங்களைப் பற்றி?   

நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

என் பெயர் நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ். 26.11.2015 அன்று எனது 24 வயதும் பூர்த்தியாகியது எனது தந்தை ரஹ்மதுல்லாஹ் தாய் ஜரீனா உம்மா. புத்தளத்தில் 24 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நான் பிறந்தது புத்தளம் எனினும் என் தாய் தந்தையார் மன்னாரில் முசலி பிரதேச சபைப் பிரிவில் பண்டாரவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் விரப்பட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் புத்தளத்தில் வந்து குடியேறியவர்கள்.


 02. “கடல் தேடும் நதி” கவிதைத் தொகுதியினை அண்மையில் வெளியிட்டு வெற்றியும் பெற்றுள்ளீர்கள். அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?   


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

நூல் வெளியீடு என்பது ஒரு ஆசிரியனின் பிரசவம் என்பதை உணர முடிந்த சம்பவம் தான் அது. அதுவும் என் கன்னி வெளியீடு என்பதால் பல பாடங்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொள்ள நிறையவே சந்தர்ப்பங்கள் கிட்டின. அதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். வெற்றியோ தோல்வியோ சந்தித்து விடலாம் எனும் தைரியத்தில் தான் களமிறங்கினேன். அல்ஹம்துலில்லாஹ் வெற்றி கிடைத்தது. சந்தோஷம் தருகிறது. 


03.கவிதை தவிர்ந்த உங்களது ஏனைய திறமைகள்? 



நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

கலைத்துறையில் கவிதை போக சிறுகதை, குறுந்திரப்படக் கதைகள் எழுதுதல், நடிப்பு போன்றவற்றில் ஆர்வமிருக்கிறது. இது வரைக்கும் “உயிர் மடல்” எனும் குறுந்திரப்படத்தின் கதையும் அடுத்ததாக “பேச மறந்த வார்த்தை” எனும் குறுந்திரைப்படத்தின் கதை வசனம் எழுதி, நானே நடித்தும் இருக்கிறேன். பார்வையாளர்களின் கை தட்டல்களும் வாழ்த்துக்களும் அதன் வெற்றியைப் பறைசாற்றுவதாய் அமைந்தது. அதற்கும் மேலதிகமாக கணனி வடிவமைப்பில் ஆர்வம் அதிகம். அத்துறையில் தான் தனியார் நிறுவனமொன்றில் வேலையும் செய்கிறேன். 



04.இலக்கிய உலகில் காலடி வைத்த முதல் அனுபவம் பற்றி? 



நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்

 என் கவியார்வத்தை அதிகரித்த பெருமை முகநூலையே சாரும். ஆரம்ப காலங்களில் கவிதை என்றல்லாமல் சமூகத்தில் நடக்கின்ற தீமைகள், பிழைகளைச் சுட்டிக்காட்டி சிறு சிறு கருத்துக்களை பதிவிட்டு வந்தேன். சில பொழுது அதை வாசிப்பதற்கு நீளமானதாக அமைந்து விடுவதுமுண்டு. நீளமான வரிகளை வாசிக்கும் அளவு பார்வையாளர்களும் அவ்வளவு தயாரில்லை என்பதைப் புரிந்து கொண்டு, கவிதையை கையில் எடுத்தேன். அழகிய வசன நடை சேர்த்து சிறிது சிறிதாக எழுதுவது வாசிக்க இலகுவாகவும் என் கருத்துக்களை மக்களோ பேச விடுவதிலும் எனக்கு பெரும் துணையாய் இருந்தது. அதன் பின் என் எழுத்தில் ஆர்வங்கொண்டவர்கள் தந்த ஊக்கம் பெரிய பெரிய கவிதைகளையும் எழுதும் ஆர்வத்தைக் கொடுத்தது.


 05.இத்துறையில் நீங்கள் கற்றுக்கொண்ட மனிதர்கள், பாடங்களைக் கூற முடியுமா? 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்

 “கவிதை உலகத்தில் நானே ராஜா” எனும் எண்ணத்துடன் வாழ்கின்றவர்கள் பலர். அதற்கும் மேலாக என் எழுத்துக்களை வரவேற்கின்ற, ஊக்கம் தருகின்ற மூத்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். தான் மட்டும் வளர்ந்தால் போதாது புதிய முகங்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்து அவர்களையும் முன்னேற்ற வேண்டும் எனும் ஆவல் கொண்டவர்கள் பலர். அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் என் நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் சிலர் தன்னை விட ஒருவன் உயர்ந்து விடக்கூடாது எனும் எண்ணத்துடன் அலைகிறார்கள். அவர்கள் அவ்வெண்ணத்தைக் கை விட வேண்டும். 


06. ஒரு நூலினை வெளியிட்டு, அதில் வெற்றி பெறுவது அத்தனை சாதாரணமான விடயமல்ல. உங்கள் வெளியீட்டின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்… 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

தொழிநுட்பம் வளர்ந்து விட்ட காலமிது. எதற்கும் ஒரு அன்ரொயிட் கைப்பேசி போதும் எனும் நிலை உருவாகி விட்ட பின், நூல் என்பதன் பதம் “மின்நூல்” எனும் திசையில் நகர்வதைக் காணக்கூடியதாய் இருந்தது. நூல் வெளியீடுகளுக்கு வருகை தருகின்ற ஆர்வம் பலருக்கும் இல்லை என்பதை கற்றுக்கொண்டேன். நூலின் அறிமுக நிகழ்வில் பலரும் வருவதாய் சொல்லி விட்டு நூல் வெளியீடுகள் முடிந்த பின் தன்னால் வர முடியவில்லை என மன்னிப்புக்கோருகிறார்கள். அதை என்னால் ஏற்றுக்ககொள்ள முடியவில்லை. நூல் வெளியீட்டிற்கு கண்டிப்பாக சமூகம் தர வேண்டுமென ஒருவர் நினைத்திருந்தால், பல வேலைப்பழுக்களைத் தள்ளி வைத்து விட்டு, நிச்சியம் சமூகந்தந்திருப்பார்கள். காரணம் சொல்பவர்கள் அதிகம் என்பதை நன்றாகவே கற்றுக்கொண்டேன். 



07. இன்றைய திறந்த சமூக வலைத்தளங்களினூடாக கவிதைக்கென்று ஒரு திறந்த வெளி காணப்படுகின்றது. இதில் எவ்வாறு நிலைப்பது,வெற்றியடைவது என நினைக்கின்றீர்கள்?


 நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

உண்மை தான். யார் வேண்டுமானாலும் எழுதலாம். எதை வேண்டுமானாலும் எழுதலாம். அத்தனையும் முகநூல் தாங்கிக்கொள்ளும் எனும் நிலை தான். இருந்தாலும், சமூக நோக்கோடு எழுதப்படும் பதிவுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருக்கிறது. சமூகத்தில் நடக்கின்ற தீமைகளைத் தட்டிக் கேட்கின்ற அல்லது கேட்க நினைக்கின்றவர்கள் பலர் அவ்வாறான பலரும் முக நூல் பதிவுகளுக்கு காத்திரமான பின்னூட்டத்தை இடுவார்கள். தன் புகழ் பாடுவதை விட்டு விட்டு சமூக நோக்கோடு நடப்பதால் நின்று நிலைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். 


 08.நல்ல “கவிஞன்” என்ற இடத்தை எவ்வாறு தக்க வைத்துக்கொள்ளலாம் என நினைக்கின்றீர்கள்? 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

ஒரு பாடசாலையைப் பொறுத்த வரை மாணவர்களைத் தண்டிக்கின்ற ஆசிரியர்கள்இ மாணவர்களுக்கு கெட்டவர்கள் ஏனையவர்கள் நல்லவர்கள் அது போலத் தான் கவிஞனும். யாரையும்இ எந்தக் குழுவையும்இ எந்த கட்சியையும்இ எந்த அரசையும் வசை பாடாமல் கவிதைகள்இ எழுத்துக்கள் வரைவானேயானால் அவன் நல்ல “கவிஞன்” எனும் இடத்தில் உள்ளவன். ஏனையவர்கள் யாரை வசை பாடுகிறார்களோ அவர்களின் எதிரிகளுக்கு மட்டும் நல்ல “கவிஞன்”. கவிதை என்பது சிறந்த மொழி. அதை சிறந்த முறையில் பேசப் பழகிக்கொள்வது நல்லது. வார்த்தைகள் வந்த பின் மீட்டிக்கொள்ளுதல் கடினம். 


09. உங்கள் கவிதைக் களத்துக்கான சூழல் எவ்வாறானது எப்படிப்பட்ட கவிதைகள் சமூகத்துக்குத் தேவையென நினைக்கின்றீர்கள்?


 நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

மண் வாசனைக்கவிதைகள்இ பேச்சு வழக்கு கவிதைகளை எழுத ஆர்வம் எனக்கு அதிகம். சமூக மட்டங்களில் இளைஞர்இ யுவதிகளைப் பொறுத்த வரை காதல்இ நட்புஇ பிரிவுஇ தனிமை பற்றிய கவிதைகள் அதிகம் வரவேற்கப்படும். அந்த ஆசை இளைஞனான எனக்கும் இருக்கிறது. அதனால் பல கவிதைகள் அவ்வாறான தலைப்புகளை தாங்கியே எழுதியிருக்கிறேன். சமூகத்துக்குத் தேவையான கவிதைகள் எனும் போது போதைஇ வரதட்சனைஇ துஷ்பிரயோகங்கள் போன்ற சமூகத்தில் நடக்கும் தீமைகளைச் சுட்டிக்காட்டிஇ சமூகக்கண்களைக் கலங்க வைக்கக் கூடியஇ இதயங்களோடு பேசக்கூடிய கவிதைகள் தான் தேவைஇ குரல் வடிவம் கொடுக்கப்படும் கவிதைகள் இதயங்களோடு பேச இலகு வழியாக அமையும். அப்படிப்பட்ட படைப்புகளை கவிஞர்கள் சமூகத்திற்கு தர வேண்டும்.


10. எமது கலைஞர்களின் “அல்பம்” “குறுந்திரைப்படம்” “இறுவெட்டுக்கள்” போன்றவற்றில் இலங்கை ரசிகர்களின் ஆதரவு அல்லது ரசனைத்தன்மை எப்படியிருக்கின்றது? 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

அல்பங்களை யூடியுப் அல்லது முகநூலில் பதிவேற்றிய பின்இ அதை ரசித்துக் கேட்கின்றஇ பார்க்கின்றவர்கள் நிறையவே இருக்கிறார்கள். இருந்தும்இ வெளியீடுகளில் பங்கெடுத்தல்இ இறுவெட்டுக்களை பணம் கொடுத்து வாங்கி கலைஞர்களுக்கு உதவுகின்ற மனம் மிகவுமே குறைவு. திருட்டு வீசிடிகளுக்கே இப்போது கிராக்கி. 



 11.குறுந்திரைப்படம் பற்றிச் சொன்னீர்கள் இலங்கையின் சினிமாத்துறையில் இதற்கான வாய்ப்புக்கள் வரவேற்புக்கள் பற்றி? 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

இலங்கை சினிமாத்துறையைப் பொறுத்த வரையில் வாய்ப்புக்கள்இ வரவேற்புக்கள் மிகக்குறைவென்றே தோன்றுகின்றது. முதலீடு செய்து எமது படைப்புக்களை வெளியீடு செய்வதற்கு எவரும் தயார் நிலையில் இல்லை. அண்மையில்இ இலங்கையில் பிரமாண்டமான திரைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அதனை வெளியீடு செய்வதற்கு அந்தப்படக்குழு பட்ட அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமல்ல. முகநூலில் கூட அதன் விளம்பரத்தையிட்டு அதற்கான உதவிகளைக் கோரியிருந்தனர். ஆனாலும்இ அதனை வெளியிட்டுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இலங்கை தொலைக்காட்சிகளிலும் எமது படைப்புக்களைப் பெற்று ஒளிபரப்ப எவரும் முன்வருவதில்லை. காரணம்இ எம் படைப்பாளிகளின் மீதுள்ள அவநம்பிக்கையே. இந்திய சினிமாஇ சின்னத்திரை நாடகங்கள்இ பாடல்களுக்கு இருக்கும் வரவேற்புக்கள் எமக்கில்லை என்றே சொல்லத்தோன்றுகின்றது. அத்தி பூத்தாற்போல சில வாய்ப்புக்கள் அமைந்து விடுவதுமுண்டு தான். முகநூல்இ யூடியுப் மூலமாகவே கலைஞர்கள் தங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிக்கொள்கின்றார்கள். சிறந்த விளம்பரத்தையும் ரசிகர்களுக்கு நமது படைப்புக்கள் மீதான ஆர்வத்தையும் நம்பிக்கையூட்டும் விமர்சனங்கள் எழாததே ஓர் குறைபாடாகக் கருதுகின்றேன். அத்தோடுஇ பிரமாண்டமான தொழிநுட்ப வளர்ச்சியினையும் பொருளாதார நிலையிலும் பிந்தங்கியே இருக்கின்றோம். 



12 .இதில் ஊடகங்கள் தரும் ஆதரவு பற்றி?

நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

இணையத்தளங்கள்இ செய்தித்தளங்கள் பாராட்டக்கூடிய சேவையை வழங்கி வருகிறார்கள் என்பதில் ஐயமில்லைஇ செய்திகளையும்இ குறுந்திரைப்படங்களையும் தங்கள் பக்கத்தில் பதிவிட்டு அவர்களே அதற்கான விளம்பரங்களையும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட இணையத்தளங்களுக்கு நன்றிகள். அதற்கும் மேலதிகமாக தொலைக்காட்சி வானொலிஇ பத்திரிகை போன்றவற்றில் பணியாற்றுகின்றவர்கள் கலைஞர்களைத் தேடிப்பிடித்துஇ இலைமறை காய்களை சமூகத்திற்கு அடையாளங்காட்டி நாளைய நாளை ஒளி மயமாக்கும் வழிகளை அவர்களுக்காக திறந்து விட வேண்டும். 


13.எதிர்காலத்தில் சாதிக்க நினைப்பதும் சம காலப்படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது 


நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

சமூக சிந்தனைக் கவிதைகள் இன்னும் நிறையவே எழுத வேண்டும். சமூகத்துடன் இலகுவில் பேசக்கூடிய குறுந்திரைப்படங்கள்இ கவிதைக் காணொளிகளை சமூகத்திற்காக வழங்க வேண்டும் எனும் ஆவலிருக்கிறது. என்னைப் போலவே இன்னும் பல இளைய கலைஞர்கள் சிறு வயதிலேயே நிறை சாதிக்க வேண்டும். அதற்காக என்னால உதவிகளைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன். சம காலப் படைப்பாளிகளே! “பேனா ஓர் ஆயுதம்” அதைக் கொண்டு யாரையும் காயப்படுத்த நினைக்காதீர்கள். “கவிதை ஒரு மொழி” யாருக்கும் அது புரியும் அதைக் கொண்டு யார் மனதும் புண்படும் படியாக பேசி விடாதீர்கள். சமூகக் கறைகளை உங்கள் எழுத்துக்களால் கழுவி விடுங்கள். காலத்திற்கேற்ற பதிவுகளை தாருங்கள். அதை வரவேற்கின்றவர்கள் பாராட்டுகின்றவர் இந்த உருண்டை உலகத்தில் எங்காவது ஒரு பாகத்தில் இருந்து கொண்டு தான் இருப்பார்கள். நம்பிக்கையோடு முன்னேறிச் செல்லுங்கள். 



14. நீங்கள் நன்றி கூற வேண்டும் என நினைப்பவர்கள்?


 நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் 

நன்றிகள் கூற பொருத்தமாவன் என்னைப்படைத்த அல்லாஹ் தான் முதலானவன். மேலும்இ என்னை பல சிரமங்களுக்கு மத்தியிலும் என்னைப் பெற்ற தாய் சுமைகளைத் தாங்கி வளர்த்த தந்தை என் வெற்றியைப் பார்த்து உள்ளுக்கும் அதிகம் மகிழ்ந்து பாராட்டும் என் சகோரஇ சகோதரிகள் என் நன்றிகளின் அடுத்த படியிலுள்ளவர்கள். அதற்கு அடுத்ததாக என் எழுத்துக்கு களம் தரும் ஆதரவு தரும் அத்தனை முகநூல் சொந்தங்களும் என் நன்றிக்கு காத்திரமானவர்கள். என் கருத்துக்களைப் பகிரந்து கொள்ள வாய்ப்பளித்த கல்குடா நேசன் இணையத்திற்கும்இ சகோதரி ராஜ் சுகா அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.




No comments: