Monday, December 28, 2015

தமிழ் ஓதர்ஸ் இணையத்தில் (டிசம்பர் 2015) [ ஏற்றிவிட நீதான் ஏணி ]

http://www.tamilauthors.com/03/647.html




அறம் செயத் துணி -அது
மனம் காக்கும் துணி
தரம் பார்த்து அணி -உடை
தந்திடும் முதலா மணி....


பெறுமை தீயதோர் பிணி
கொன்றால் நீயுமோர் மணி
பொறுமையை நித்தமும் திணி
புகழுவார் உன்னையு மினி....



கைக்கு பலந்தான் பணி
வாழ்வுக் கதுதான் கனி
'தை'க்கு அழகுதான் பனி
தகாததை சீக்கிரம் தணி....


ஏழைக்கும் வேண்டுமோர் காணி
ஏற்றிவிட நீதான் ஏணி
வாழையை பார்த்துனை பேணி
வாழ்வினை அமைத்திட வாநீ....!!

No comments: