Wednesday, May 7, 2014

ஊடறு இணைய இதழில் எனது காதலுக்கு கண்ணில்லையென்று?? என்ற கவிதை (07.05.2014)



காதலிக்கவென்றால் ஒரு
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ
அழகிருக்கனும் கொஞ்சம்
அந்தஸ்துமிருக்கனும்
படித்திருக்கனும் லேசாய்
பளபளப்புமிருக்கனும்
தொழிலிருக்கனும் அதிலும்
கொழுத்த வரவிருக்கனும்
மெலிவாயிருக்கனும் மேனி
பொழிவாயுமிருக்கனுமாம்
ம்ம்ம்ம்
இதுக்குத்தான் சொன்னார்களோ
காதலுக்கு கண்ணில்லையென்று??
அப்போ
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்
அப்படியென்றால்
எதனை காதலிக்கின்றார்கள்??

No comments: