Monday, May 5, 2014

தமிழ்லீடர் இணைய இதழில் எனது கவிதை (04.05.2014)

http://tamilleader.com/?p=32738

மணித்தியாலங்களோ
இருபத்துநான்கு -உனை
மனதுக்குள் நினைப்பதோ
நொடிகளின் எண்ணைக்கை
வேறு சிந்தைகள் கடந்தாலும்
மாறாக எதனைச் செய்தாலும்
ஆறாக ஓடுவதென்னவோ
மாறாத உன் ஞாபகந்தான்
அன்றாடங்களின் கடக்கும்
ஆயிரம் அதிசயங்கள் இருக்க‌
வென்று கொண்டிருப்பதென்னவோ
நினதான நினைவுகளே
எதிர்ப்புக்கள் எனக்கெதிராய்
எழும்பிவந்த போதெல்லாம்
எடுத்தெறிந்து விடத்தானெத்தனித்தேன்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்ததென்னவோ
எமக்குளுண்டான நேசம்மட்டுமே
அது என்னவோ
இங்குமட்டுந்தான்
விலக நினைக்கும்போதெல்லாம்
விடாமல் ஒட்டிக்கொள்வதும் நினைவுகளில்
விடாப்பிடியாய் கட்டிக்கொள்வதும்…
ஒன்றே தெய்வமென்றால்
காதலும் ஒன்றல்லவோ
ஒருவனே தேவனென்றால்
ஒருவருக்கு ஒருவரன்றோ
காத(லி)லன்
காதலுக்கு சாட்சியாய்
காத்துக்கிடக்கின்றது -நம்
காதல்
நாளைய‌
சரித்திரத்தை நிரப்பிவிட‌
காதல் ஆழமானதென்று!!

No comments: