Tuesday, July 16, 2013

காலம் வலிமையானது...



எல்லைகளை தொடுமிடத்து
புள்ளிகளை இடுபவன் நீ
தொல்லைகளை ஒதுக்குகையில்
தொற்றிக்கொண்டு தொடர்பவனும் நீ...

அத்திவாரம் என்பதனை இத்தனை
அலட்சியமாகவே இடுவாய்
புத்திக்கு விலையீடாய்
புனிதங்களையா தொலைப்பாய்

உறவுகளை உருவாக்குவதல்ல நேசம்
உயிருக்குள் பத்திரப்படுத்துவதே அதுவாம்
வரவுகளுக்காய் விலைபேசிட அற்பம்
வருவாயுமதுவல்ல உயர்பாசம்...

கைத்தடி தொடும்நேரம்
கால்தடுக்கி விழும்வேளை தூய‌
நேசம்மட்டும் தேடியலையும் மனம்
இன்றே வித்திட்டுக்கொள்
காலம் வலிமையானது...

புன்னகைப்பதெல்லாம் பூக்களல்ல‌
மணப்பதெல்லாம் புனிதமுமல்ல‌
வாசமில்லா மலர்களுக்குள்ளும்
தேந்துளிகள் ஒளிந்தேயி ருக்கின்றன...




No comments: