Monday, July 15, 2013

ஈரமாகவே...







நீ தந்த கடைசி முத்தம்
இன்னுமென் உள்ளத்தில்
ஈரமாகவே...

நமக்கான எல்லைகளை
வரையறுத்த எதுவெல்லாமோ
மரித்துப்போயிருக்க‌
நம்வானத்தை சிதைத்துப்போட்ட‌
சிறகுகளெல்லாம்
தீக்கிறையாகிப்போயிருக்க‌
இன்றும்
சுவாசிக்க துடித்துக்கொண்டிருக்கும் நம்
நேசம் சொல்லிடட்டும்
காதலின் தேவை
காமத்திலில்லை என்பதனை

No comments: