01.மேகத்தீண்டல் போல
மோகம் கொண்டெழும்
தேகக் காதல் வேண்டாம்
இரும்பை உருக்கி வடித்த
உறுதியான
உள்ளக்காதல் வேண்டும்
உலக மின்னு மின்னும்
கண்ணீர்க்கதைகளை சுமக்காதிருப்பதற்கு...!!
02.அகத்தி னழகு
முகத்தினில் தெரியுமென்பர்
அலங்கரித்துக் கொள்ளுங்க ளுங்கள்
அகங்களை யன்பினாலும் நற்
பண்புகளின் பயன்களினாலும்...!!
03.தாழ்மை யுங் களை மேன்மையாக்கிடும்
மேட் டிமையோ தாழ்த்தி விட்டிடும்
உங் களை நீங்களே யுயர்த்தாதீர்
உயரத்திற்கு போனாலும் திமிராதீர்...!!
04.பற்றியது பற்றியது தீயதும் பற்றியது
பற்றியது பற்றியது மனமுனை பற்றியது
எட்டியது எட்டியது காதலு மெட்டியது
எட்டி யது எட்டி யது வாழ்வுதனை யெட்டியது...!!
05.நம்மை சுற்றியுள்ளோ ரெலாம்
நல்லவர்களில்லை
நம்மை சுற்றியுள்ளவர்களில் தான்
நல்லவர்களு மிருக்கிறார்கள்...!!
2 comments:
Best Regards
மிக்க நன்றி பிறோஸ் அண்ணா
Post a Comment