பண்டிதருக்காய் ஏழ்துகையில் பாமரனுமெதை புரிய
பக்கம் பக்கமாய் நீள்கையில் படிக்காதவனெதை யறிய
பதக்கங்கள் பெற்றிடவே பட்டை தீட்டப்பட்டதிவை
மனங்கள் புரிந்திடவே பதிக்கப்படாவேடு களிவை...
யாப்பறிந்த தமிழ் யாசகரிங் கரிது
வெண்பாவினை புரிந்ததமிழ் மனங்களிங் கரிது
எளிமையாய் தெளிமையாய் எழுதிவிட்டதை யிங்கு
ஏளனம் செய்திடவே மனம்ஏகத்துக்கு மிருண்ட தின்று...
ஏழைத்தமிழினையும் ஏற்கத் தலைபடுவீர்
இயலாமைக்கு கரமிட்டு ஏற்றம் காண்பிப்பீர்
குறைகளும் கலைந்திட நிறைகளை சொல்லிடுவீர்
கறைகளை யகற்றிட கவிதனை செய்திடுவீர்...
புதுமைக்கு தலையாய் புகலிடம் தருவீர்
புயலெனும் மாற்றத்தினை விரைந்துநீர் பெறுவீர்
மாற்றங்கள் காண்பது மடமையல்ல அறிவீர்
மரபுகள் நீங்கியது தமிழ்மரணமல்ல தெளிவீர்...
No comments:
Post a Comment