Sunday, October 5, 2014

மறக்கத்தான் நினைப்பேனோ


என்னை உனக்கு மறந்துபோயிருக்கலாம்
எதுவும் நினைவில் இல்லாமலிருக்கலாம்
விண்ணை நோக்கி உயர்ந்த நிலையில் +என்னிடம்
விடுதலையை நீயும் உணர்ந்திருக்கலாம்

காலங்கள் மட்டும்தான் கடந்திருக்கின்றது -என்னில்
காட்சிக ளெதுவும் கலைந்திடவில்லை
பாலமாய் நமைவளர்த்த கவிதையும் -இன்று
மாயமாய் எங்கேயோ மறைந்துவிட்டது...

அன்றொருநாளின் ஆனந்தப்பொழுதுகளும்
அழுகையோடு தொடர்ந்த இன்பமுடிவுகளும்
கன்னத்தில் வழிந்த நீரும் இறுதியில்
கண்ணீராய்த்தான் முடிந்துபோனது...

விதியை ஒருபோதும் நம்பியதில்லை
விழிநீரில் ஓய்வு கொஞ்சமுமில்லை
கதியின்றி நிற்குமிந்த அபலைக்கு
கைகொடுக்க கடவுளின்றி  யாருமில்லை...

பலிவாங்கும் எண்ணமெனக்கில்லை -உன்னையினி
பார்க்கும் வலிமையும் மனதிலில்லை
களிப்புடன் என்றென்றும் நீர்வாழ -கடவுளிடம்
கையெந்துவதை தவிர வேறுவேலையில்லை...

















No comments: