Sunday, October 26, 2014

வாழத்தான் வேண்டும் (26.10.2014 தினகரன் வாரமஞ்சரி )

வாழ்க்கை முடியுமட்டும்
வாழத்தான் வேண்டும்

தாழ்வு வந்திடினும்
எழத்தான் வேண்டும்

ஊமை நாவுகள்
இசையை கேட்கக்கூடாதா

ஏழ்மையுருக்குவதால் எல்லாம்
இழந்திடல் வேண்டுமோ
உள்ளவனுக்கு ஒன்றென்றால்
இல்லாதவனுக்கு ஆயிரமாமே
இறைவனிருக்கும் இந்த‌
இல்லாதவனிடத்தில்
ஆயிரங்கள் உருவாவதிலொன்றும்
அதிசயமே இல்லை...

வாழத்தான் வேண்டும் ஏதோவோர்
எளிய வழியில் -நல்ல‌
தெளிந்த வழியில் -தீமை
அறுந்த வழியில் -மனம்
மகிழும் வழியில் -பலர்
நெகிழும் வழியில் -குணம்
நிலைக்கும் வழியில் -நாம்
வாழத்தான் வேண்டும்...

ஏழ்மை தழைத்தோங்கி   நிற்பினும்
வாழத்தான் வேண்டும்!!

No comments: