Monday, September 21, 2015

நானாக எழுகின்ற கோலானாய்

காலாற‌ நடைபோடும் அலையானாய்
கண்சிமிட்டும் வேளையிலே கனவானாய்
தேனூறும் சுவையருவி நீயானாய் -செல்ல‌
தேனமுது நிறைந்திட்ட கவியானாய்...

வானளவு நேசத்தை யறி முகப்படுத்தினாய்
வாயாறா வாழ்த்தல்களை வரிசைப்படுத்தினாய்
வானமழையாய் அன்பினைப் பொழிந்தாய்
வா வென்பதற்குளே வந்திநிற்கின்றாய்...

சுட்டெரிக்கும் சூரியனை மறைத்துநிற்கின்றாய்
சூழ்ந்துநின்று நிழலாக சுகம்தருகின்றாய்
பட்டதெல்லாம் மறந்துபோகும் மருந்தாகின்றாய்
பகல்கனவெல்லம் நனவாக்கும் விழியாகின்றாய்...


நானாக எழுகின்ற கோலானாய்
நாள்முழுதும் உற்சாக மருந்தானாய் -கவியே
வீணாக போய்விட்ட காலம்மறைத்தாய்
விறுவிறென்றெழுகின்ற விருந்தானாய்




No comments: