Saturday, September 12, 2015

நெஞ்சில் வெறியுண்டு கண்மணியே!!


கண்ணாள், பாரா யித்தாயவள்
கதறல் மறைக்கும் கண்ணீரினை
பெண்ணாய் பிறந்ததை பெறுமையென‌
எண்ணிய என் நிலமையதை...

எண்ணியெண்ணிக் கனவுவளர்த்து
எண்ணற்ற நினைவு சுமந்து
பொன்னாய்ப் போற்றிய -இப்
பெண்னன்பை புறந்தள்ளிய‌
புலம்பலினை பாராய்....

கருவறையி லுனை சுமக்குமட்டும்
காதல்கொண்ட ஓர்கயவன்
உருவம் மறைத்துக்கொண்டு -எனை
உதறிப்போன கதையினை கேளாய்....

காசுபணம் வேண்டாமெனத்தான் என்
கடலளவன் பை பெற்றுக்கொண்டான்
தூசாய் எனைநினைத்து கண்மணியே
தூரப்போனக் கொடுமை பாராய்...

பழிச்சொற்கள் பலவற்றை என்னில்
பலவந்தமாய் திணித்து
ஒழிந்துகொண்ட அக்காதகன் -என்னை
ஒழித்துக்கட்ட நினைக்கின்றான் பாராய்...

பட்டுத்துணிகள் பல்லாயிரம் காசு
பணத்தொகை அள்ளிவந்தவளுக்காய்
விட்டுக்கொடுக்க வேண்டுமாம் -அவனை
விட்டுப்போகவேண்டுமாம்
விலைபேசுகின்றான் காதலை
விடையில்லையே கண்மணியே
விழிமூடிக்கொள்....

விலைபேசும் உலகிது கண்ணாள்
விசித்திரமாம் மனங்களிங்கு
அலைபோல் நிலமை வரினும் -கண்மணியே
அணையாய் காப்பேனுனை

நெஞ்சில் வெறியுண்டு கண்மணியே
நெடுந்தூரம் பயணிப்போம்
அஞ்சியோடும்வரை துன்பத்தை
அடித்தே விரட்டிடுவோம்...

அன்னைத் துன்பமினி உன்னை
அணுகாது காத்திடுவேன்
என்னத் துயர் நேரிடினும்
எழுந்து நின்று ஜெயித்திடுவேன்....





No comments: