காத்திருந்து இன்பம் சேர்க்கலாம்
மோதலை தூரப்போடலாம் -உயிரே
மோட்சத்தை நாம் பெறலாம்
கல்லையும் கடலையும் ரசிக்கலாம் -இன்றே
கவிதைபாடி நம்மை ருசிக்கலாம்
இல்லாத மகிழ்வுகளையெல்லாம் தேடலாம் -நம்முள்
இலகுவாக காதலை வளர்க்கலாம்
ஊரூராய் போய் வரலாம் -இருவரும்
ஊர்வாயை விரியச்செய்யலாம்
பாரெல்லாம் சுற்றித் திரியலாம் -பறவைகளாய்
பார்ப்போரை வியக்கவைக்கலாம்
கண்களுக்குள் கனவுகளை விதைக்கலாம் -வண்ண
கவிதைகளாயதை அறுவடை செய்யலாம்
எண்ணங்களில் புன்னகையை பூசலாம் -எல்லா
இடங்களிலும் நம்பெயர் பதிக்கலாம்
ஈரிதழ்களின் மணத்தை பூக்களுக்கும் சொல்லலாம் -நம்
ஈரிதய பந்தத்தினை ஒற்றையாயாக்கலாம்
பேரிரைச்சல் கொண்ட இவ்வுலகபோக்குகளை -நாம்
பேதமையென உரத்துச்சொல்லலாம்!!
No comments:
Post a Comment