Wednesday, November 9, 2016

நம்பெயர் பதிக்கலாம்

காதலில் கரைகாணலாம் வா  -அழகே
காத்திருந்து இன்பம் சேர்க்கலாம்
மோதலை தூரப்போடலாம் -உயிரே  
மோட்சத்தை நாம் பெறலாம்

கல்லையும் கடலையும் ரசிக்கலாம் -இன்றே
கவிதைபாடி நம்மை ருசிக்கலாம்
இல்லாத மகிழ்வுகளையெல்லாம் தேடலாம்  -நம்முள்
இலகுவாக காதலை வளர்க்கலாம்


ஊரூராய்  போய்  வரலாம் -இருவரும்
ஊர்வாயை விரியச்செய்யலாம் 
பாரெல்லாம் சுற்றித் திரியலாம் -பறவைகளாய்
பார்ப்போரை வியக்கவைக்கலாம்

கண்களுக்குள் கனவுகளை விதைக்கலாம் -வண்ண‌
கவிதைகளாயதை அறுவடை செய்யலாம்
எண்ணங்களில் புன்னகையை பூசலாம்  -எல்லா
இடங்களிலும் நம்பெயர் பதிக்கலாம்

ஈரிதழ்களின் மணத்தை பூக்களுக்கும் சொல்லலாம் -நம்
ஈரிதய  பந்தத்தினை ஒற்றையாயாக்கலாம் 
பேரிரைச்சல் கொண்ட  இவ்வுலகபோக்குகளை -நாம்
பேதமையென உரத்துச்சொல்லலாம்!!



No comments: