Saturday, November 19, 2016

அக்கினிக்குஞ்சு இணையத்தில் (18.11.2016)

http://akkinikkunchu.com/2016/11/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2/


காதலில் கரைகாணலாம் வா -அழகே
காத்திருந்து இன்பம் சேர்க்கலாம்
மோதலை தூரப்போடலாம் -உயிரே 
மோட்சத்தை நாம் பெறலாம்…

கல்லையும் கடலையும் ரசிக்கலாம் -இன்றே
கவிதைபாடி நம்மை ருசிக்கலாம்
இல்லாத மகிழ்வுகளையெல்லாம் தேடலாம் -நம்முள்
இலகுவாக காதலை வளர்க்கலாம்…

ஊரூராய் போய் வரலாம் -இருவரும்
ஊர்வாயை விரியச்செய்யலாம் 
பாரெல்லாம் சுற்றித் திரியலாம் -பறவைகளாய்
பார்ப்போரை வியக்கவைக்கலாம்…

கண்களுக்குள் கனவுகளை விதைக்கலாம் -வண்ண‌
கவிதைகளாயதை அறுவடை செய்யலாம்
எண்ணங்களில் புன்னகையை பூசலாம் -எல்லா
இடங்களிலும் நம்பெயர் பதிக்கலாம்…
 
ஈரிதழ்களின் மணத்தை பூக்களுக்கும் சொல்லலாம் -நம்
ஈரிதய பந்தத்தினை ஒற்றையாயாக்கலாம் 
பேரிரைச்சல் கொண்ட இவ்வுலகபோக்குகளை -நாம்
பேதமையென உரத்துச்சொல்லலாம்


த.எலிசபெத்
இலங்கை

No comments: