Friday, February 12, 2016

மித்திரன் வாரமலர் சஞ்சிகையில் பிரசுரமான நேர்காணல் (14.02.2016) ரூபன்



                                        





















                                                                                                                             














1.தங்களைப் பற்றி
தம்பிராசாதவரூபன் ஆகிய நான் வலையுலகில் ரூபன் என்றே அறியப்பட்டேன்நான்பிறந்து தவழ்ந்த இடம்திருகோணமலை மாவட்டத்தில்  வயலும் வயல் சார்ந்த இடமானமருதநிலம் எனும் ஈச்சிலம்பற்றையில் தான்.  அழகிய இயற்கை எழில் கொஞ்சும் பசுமைநிறைந்த பச்சை வயல்களும்அவற்றை சுற்றி இனிய தென்னைபனைகமுகு ஆகியமரங்களும் நிறைந்தது பார்ப்பவர் எவரையும் கொள்ளை கொள்ளும் வண்ணம்அமைந்திருக்கும் எம் ஊர்அவ்விடம் என் பிறப்பிடம் என்பதில் எனக்கு மட்டற்றமகிழ்ச்சியேமேலும் என் கல்வியை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தி முஸ்ரீ சண்பகமகாவித்தியாலத்திலேயே பயின்றேன்உயர்தர வகுப்பில் கலைப் பிரிவில் முதல்முறையிலேயே சித்தியடைந்து பெற்றோரின் கனவை நிஜமாக்கி நானும்பெருமையடைந்தேன்மேலும் தி மூமாவடிச்சேனை வித்தியாலத்தில் ஆசிரியாராக சிலகாலம் கடமையாற்றினேன்வேலை தேடி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று,ஆசிரியத் தொழிலை  விட்டு விட்டு குடும்பத்தையும் தாயகத்தையும் விட்டு தனியா  புறப்பட்டேன்.  முன்னோர்கள் சொன்னபடி திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்க‌.


2. இலக்கிய பிரவேசம் குறித்து?



இலக்கிய பிரவேசம் என்னும் போது நான் பாடசாலையில் கல்வி கற்கும் போது பல மேடைப் பேச்சாளராக இருந்து கவிதைகள், கட்டுரைகள் என்றும் இலங்கை வானொலி தென்றலுக்கு இசையும் கதையும் எழுதுதல் சின்னச் சின்னக் கவிதைகள் மாத ஏடுகளுக்கு எழுதிய வண்ணம் இருந்தேன். நான் படிக்கும் காலத்தில், அப்போதே இலக்கியத்தில் பிரவேசம் ஆகிவிட்டேன்.


பின்பு கடந்த 10 ஆண்டுகள் இலக்கிய துறையில் என்னை முழுமையாக அர்பணித்த வண்ணம் இருக்கிறேன். வலைப்பூக்கள் வழி எனது எண்ணற்ற படைப்புகளை அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் எழுதிக்கொண்டு தான் வருகிறேன் இதுதான் என்னை முழுமையாக உலக அரங்கிற்கு எடுத்துக்காட்டியது.



3.இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் வெளிவர இருக்கும் நூல்கள் பற்றி கூறமுடியுமா?

நான் முன்பு இரவைத்தேடும் விடியல் என்ற மின்நூல் வெளியீடு செய்தேன். பின்பு தான் நான் யோசித்தது அச்சு வடிவில் வந்தது. அதுதான் எனது 'ஜன்னல் ஓரத்து நிலா' என்ற கவிதைத் தொகுதி.

இரண்டாவது நூல் அச்சுவடிவில் அமைக்கத் தற்போது அச்சகத்தில் இருகிறது. அதுதான்  ஆயுதப்பூ என்ற சிறுகதை நூல் 15.5.2016 மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஆதிகுமணன் அரங்கில் வெளியீடு செய்ய இருக்கிறேன்.


4. நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள்?



நாம் பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருப்பதை விட தமிழுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்ற உணர்வு என்மனதில் ஊறியது. அதன் விளைவுதான் ஊற்றுவலையுலக எழுத்தாளர்கள் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினேன். இதற்கு நான் தான் பொறுப்பாக இருக்கிறேன்.


இந்த அமைப்பின் வழி தற்போது தமிழர்களின் பண்டிகை காலங்களில் அதாவது தைப்பொங்கல். சித்திரை வருடப்பிறப்பு தீபாவளி போன்ற விசேட தினங்களை மையப்படுத்தி உலகம் தழுவிய கவிதைப்போட்டி, சிறுகதைப்போட்டி, நகைச்சுவைப்போட்டி, கட்டுரைப்போட்டி என இப்போது வரைக்கும் செய்து கொண்டு வருகிறேன்.


இலங்கையில் சகல மாவட்டங்களிலும் இலக்கிய பயிற்சி பட்டறை நடத்த திட்டம் உள்ளது மாசி மாதம் இதுசம்மந்தமாக ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற நிருவாக குழுவினர் வினாத்தாள்கள் தயாரித்த வண்ணம் இருக்கிறோம் கீழ்வரும் விடங்கள் கற்பிக்க இருக்கிறோம்.



கணினி வன்பொருள்மென்பொருள் அறிமுகம்.

கணினி வலையமைப்புகள்இணையம்சமூக வலையமைப்புகள்.

Html மொழியறிவுDomains, Hostings பற்றிய தெளிவு.

வலைத்தளம் (Web), வலைப்பூ (Blog), கருத்துக்களம் (Forum) வடிவமைத்தல்.

ஊடகங்கள் பற்றிய அறிவுவலைப்பதிவுகளும் கட்டுரைகளும்.


நகைச்சுவைநாடகம்கதைகள் புனைதல்.


புதுக்கவிதைமரபுக்கவிதைபாடல் புனைதல்.



5.எல்லா துறைகளையும் போலவே இலக்கிய துறையிலும் பல காழ்ப்புணர்வுகளால் ஒருவர்மீது ஒருவர் சேறுபூசிக்கொள்கின்றார்கள் என பரவலாக பேசப்படுகின்றது இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?



காய்க்கும் மரங்கள் கல்லெறி வேண்டுவது வழக்கம் அது போல ஒரு படைப்பாளன் மற்றறைய படைப்பாளனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இப்படியான காழ்ப்புணர்வுளால் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவதை நான் விரும்பமாட்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பாளன்  அவனது படைப்புக்கு மக்கள் மத்தில் வரும் திறனாய்வுகளை ஏற்க வேண்டும் அப்போதுதான் அடுத்த இலக்கை அடைய முடியும்


காழ்ப்புணர்வுகளால் ஒருவர்மீது ஒருவர் சேறு பூசிக்கொள்கின்றார்கள் என்றால்இலக்கியத்தை விரும்பாதவன் மற்றும் வியாபாரமாக நினைப்பவனாகத்தான் இருக்க முடியும். இப்படியான செயலில் இறங்குபவார்கள்

சந்திரனை பார்த்து நாய் குலைத்தால் நாய் நாய்தான் சந்திரன் சந்திரந்தான் சந்திரனை தொடமுடியாது.உச்சத்தில் இருப்பவன்  அதைப்போலதான் நல்ல படைப்பாளி.



6.இலக்கியம்,படைப்பாளர்கள் என்ற விடயங்கள் சமூகத்தால் எவ்வாறு நோக்கப்படுகின்றது அவர்களின் ஈடுபாடுஎவ்வாறானது?



சிற்பி கல்லை சிலையாக்குவது போல மக்களின் பண்பாடு நாகரீக வளர்ச்சிகளை இலக்கியங்கள் வழி படைப்பாளன் சமூகத்திற்கு கொடுக்கிறான் 

அது கடந்த காலங்களை விட இளையோர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் எங்கோ ஒரு மூலையில் இலக்கிய படைப்புக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த இலக்கியங்கள் வெளிவருவதால் சமூகத்தில் படைப்பாளர்கள் மேல் நம்பிக்கையும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது சொல்லப்போனால் சமூகத்தில் நகமும் தசையும் போலதான்.



.7.நீங்கள் வாசித்து வியந்த இலங்கை படைப்புபடைப்பாளர்கள் பற்றி?


நான் பல படைப்பாளிகளின் நூல்களைப் படித்திருக்கிறேன். அதிலும் சில்லையூர் செல்வராசா அவர்களின் படைப்புகளை நான் விரும்பிப் படிப்பேன். அவருடைய சிறுகதைகள், கவிதை நூல்கள்களை படிப்பவர்கள் நிச்சயம் மீண்டும் மீண்டும் படிக்கத்தான் சொல்லும், மிக அழகாக சொல்லியுள்ளார். அத்தோடு இளம் படைப்பாளிகளின் படைப்புகளையும் வாசித்த வண்ணம் வாழ்கிறேன்


8. இலக்கியம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?


இலக்கியம் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவனவாக இருக்க வேண்டும். இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை நெறிகள் வெளிப்பட்டு இருப்பதை காணமுடியும். நல்ல இலக்கியம் மக்கள் மத்தியில் அழியாது பேணப்படுகிறது.



9மலேசிய இலங்கை இலக்கிய தொடர்புகள் குறித்து?


மலேசியா எழுத்தாளர்கள் 2015ம்ஆண்டு இலங்கைக்கு வந்தரா்கள் அவர்களையும் இலங்கை எழுத்தார்களையும் வைத்து மாபெருவிருது வழங்கும் விழா நடத்தினோம் தடாகத்தின் ஊடாக அதன் போதுபல தொடர்பாடல்கள் இலங்கையில் வாழ்கிற இலக்கியவாதிகளுக்கு அறியக்கிடைத்து. அது மட்டுமா 2016.5.15 அன்று மலேசிய எழுத்தாளர்கள் இலங்கை எழுத்தாளர்கள் புலம்பெயர்ததேசத்தில் வாழும் எழுத்தாளர்களை சேர்த்து நிகழ்வு நடாத்த திட்டம் இட்டுள்ளேன் இவற்றை முன் நின்று தலைமை தாங்கி நடத்துவதும் நானே. இதன் வழி மேலும் நல்ல நட்புணர்வு வளரும் என்பதில் ஐயமில்லை..



10. மித்திரன் வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?


பல முதுபெரும் படைப்பாளிகளின் நூல்களைப் படித்து அவர்கள் கையாண்ட நுட்பங்களை அறியலாம். தேடல் உள்ளவரை படைப்பாற்றலில் சிறந்து விளங்க இடமுண்டு. அதற்காக அடுத்தவர் பாணியைப் பின்பற்றாமல், தமக்கென ஒர் தனிப் பாணியைப் பின்பற்றுதல் நல்லது.
-----------------------------------------------------------
வணக்கம்
வலைப்பூ முகவரி

தொடர்புக்கு:-+60105217640
http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-





No comments: