Thursday, January 26, 2012

சில்லறைக்கவிதைகள்!!

01.உன் பெயரெழுதி
ஓராயிரம் முறைரசித் தேன்
என் மனதறிந்து
ஒவ்வொரு முறையும்வெட்கித் தேன்!!

02.கொடுக்கும் தலைப்பில்
எழுதும் கவிதை போல‌
நிச்சயிக்கப்பட்ட திருமணம்
நம்தவிப்பில் எழுதும் கவிதைபோல‌
காதல் திருமணம்...!!

03.நட்பு வளர்க்கும் கருவியென்றா
பொய்மையை பட்டைதீட்டுகிறாய்
கற்பு போன்று அன்பை வளர்க்கும்
நட்புக்கென்ன பதிலுரைப்பாய்....!!!

04.வலிந்து பெற்ற இன்பங்கள்
வழிந்து போயிடு மொருநாள்
தெளிந்து வாழ்தல் நலமே என்றும்
வலிதான் வாழ்வில் வழியே

05.உனக்கான விதிகளை உடனே செய்திடு
உதவிகள் வருமென்று நினைப்பதை மறந்திடு
தினக்கூலி யானாலும் தன்மானங் காத்திடு
தினந்தினம் வெற்றிதான் வென்றிடு...

06.ஒற்றைப் பார்வை
ஓரிரு வார்த்தைகள்
ஓராயிரம் மெளனங்கள்
விடையில்லாத வினாக்கள்
விடுவிக்க முடியாத புதிர்கள்
தொடரும் புதுமைகள்
தொடமுடியாத தூரத்தில் நீ !!!


07.உன்
நிழலாய் இருந்திடவே
ஆசைகொண்டேன் -நீயோ
எனக்கு
நிலவாய் தெரிந்திடவே
ஆவல்கொள்கின்றாய்

No comments: