எத்தனைபேர் சொந்தமென்று
எவருமில்லை எனக்காக...
ஊர்ப்போய்ச் சேரத்தான்
உவகையோடு பயணித்தேன்
உயிருக்குள் உயிரையூற்றி
உள்ளன்புக்குள் உணர்வுகளை பொத்தி
உலகை வெல்லத்தான் காத்திருந்தேன்...
கண்கொண்டு திரைவிலக்கி
கனவுகளை அரங்கேற்றி
காதல் நான் வளர்த்திருந்தும்
கண்ணீர் குடத்துக்குள்ளேதான்
கண்ணயர முடிந்திருந்தது...
நேசங்களை தேக்கிவைத்து குளத்து நீராயது
பாசங்களை பதுக்கிவைத்து விழல் நீராயது...
வாலிப வேட்கைக்குள்
வளர்ந்தது சோகங்கள் மட்டும்
இளமையின் தோட்டத்துக்குள்
பிறந்தது ஏமாற்றங்கள் மட்டும்...
பிறப்பில் குற்றம் காணவே விழைந்தேன்
இறப்பில் தேற்றம் தேடவே முனைந்தேன்
சுற்றமெங்கும் சூனியங்களாய் உணர்ந்தேன்
மற்றதெல்லாம் சூறாவளியால் சிதைந்தேன்...
எத்தனை பேர் சொந்தமென்று
எவருமில்லை எனக்காக
எதைக்கொண்டு தேற்றுவது
என் மனதின் சுகம் காக்க...
No comments:
Post a Comment