நீ அழும்போது பார்த்து
முதலில் மகிழ்ந்த
ஒரே ஜீவன் உன் தாய்
தன் பிரசவத்தின்போது!!
Monday, September 22, 2014
Wednesday, August 6, 2014
ஒருநாள் நானும் ஜெயித்திடுவேன் -தினகரன் வாரமஞ்சரியில் (19.10.2014)
விழுந்த இடத்தில் முளைத்திடுவேன்
விதியை துடைத்து எறிந்திடுவேன்
அழுத நாட்களை மறந்திடுவேன்
அழகிய வாழ்வை நெய்திடுவேன்!
விழுத்திய மனிதரை மறந்திடுவேன்
விபத்தாய் எதையும் நினைத்திடுவேன்
தழும்பை பார்த்தே அழுதிடேன்
தரணியில் பெயரை நிலைத்திடுவேன்!
முயற்சி0யை மனதில் இருத்திடுவேன்
முழுமனதாய் எதிலும் இறங்கிடுவேன்
உயர்ச்சியை மட்டும் விரும்பிடுவேன்
உலகமே எதிர்த்தாலும் நிமிர்ந்திடுவேன்!
வ(ழி)லிகளே வாழ்க்கையென உணர்ந்திடுவேன்
வருத்திய வழிகளை மறைத்திடேன்
ஒளியை பிடிக்க ஓடிடுவேன்
ஒருநாள் நானும் ஜெயித்திடுவேன்!!
விதியை துடைத்து எறிந்திடுவேன்
அழுத நாட்களை மறந்திடுவேன்
அழகிய வாழ்வை நெய்திடுவேன்!
விழுத்திய மனிதரை மறந்திடுவேன்
விபத்தாய் எதையும் நினைத்திடுவேன்
தழும்பை பார்த்தே அழுதிடேன்
தரணியில் பெயரை நிலைத்திடுவேன்!
முயற்சி0யை மனதில் இருத்திடுவேன்
முழுமனதாய் எதிலும் இறங்கிடுவேன்
உயர்ச்சியை மட்டும் விரும்பிடுவேன்
உலகமே எதிர்த்தாலும் நிமிர்ந்திடுவேன்!
வ(ழி)லிகளே வாழ்க்கையென உணர்ந்திடுவேன்
வருத்திய வழிகளை மறைத்திடேன்
ஒளியை பிடிக்க ஓடிடுவேன்
ஒருநாள் நானும் ஜெயித்திடுவேன்!!
Sunday, May 18, 2014
வசியமா வைத்திருக்கின்றாய்??
வசியமா வைத்திருக்கின்றாய் -உன்
வசந்தமான கண்களுக்குள்
உசிரையே வாங்குகின்றாய் -அந்த
உருட்டிவிளையாடும் கவிதைகளுக்குள்!!
வசந்தமான கண்களுக்குள்
உசிரையே வாங்குகின்றாய் -அந்த
உருட்டிவிளையாடும் கவிதைகளுக்குள்!!
Saturday, May 17, 2014
கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டன...
நாம் சென்றுவந்த பாதைகள்
நமக்காக காத்திருந்த காற்றுவெளி
நம்மை வரவேற்ற பூந்தோட்டம் -எல்லாமே
அவசரத்தந்தி அனுப்பிவைத்து
காத்துக்கிடக்கின்றது
கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டனவென்பதனை
அறியாமலேயே...!!
நமக்காக காத்திருந்த காற்றுவெளி
நம்மை வரவேற்ற பூந்தோட்டம் -எல்லாமே
அவசரத்தந்தி அனுப்பிவைத்து
காத்துக்கிடக்கின்றது
கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டனவென்பதனை
அறியாமலேயே...!!
Friday, May 16, 2014
தமிழ் லீடர் இணையத்தில்... (14.05.2014) தாக்கமெல்லாம் பூக்களென்று!!
http://tamilleader.com/?p=33415
உருண்டுவிழும் ஆலங்கட்டியாய்
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது
இயலாமைகளை சுட்டிக்காட்ட
இமையிதழ்களில் கதறுவதே
இவளின் வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை
இமையிதழ்களில் கதறுவதே
இவளின் வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை
வெறும் ஏமாற்றங்களிலும்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்
அன்பெனும் முகமூடிதரித்த
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது
‘நம்பிக்கை’யென்று
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது
‘நம்பிக்கை’யென்று
பயணங்களுக்கு மட்டுமுதவும் பாதணியாய் அவளை
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்
இனியவள் வாசலுக்குள்
கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும்
காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி
தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில்
தாக்கமெல்லாம் பூக்களென்று!!
கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும்
காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி
தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில்
தாக்கமெல்லாம் பூக்களென்று!!
ஊடறு இணைய இதழில்... (14.05.2014) பிரிந்து செல்வதில் பிழையென்ன???
http://www.oodaru.com/?p=7424
த.எலிசபெத்(இலங்கை)
ஒத்துப்போகவில்லையெனில்
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???
சீர்வரிசைகளென்று தந்தையின்
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???
பத்துமாதம் சுமந்துபெற்ற பிள்ளை
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???
அலுவலகத்திற்கு ஒரு(வன்)த்தி
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???
பிந்திய சிலநாட்களில்
எந்தனின் தலையெழுத்தென்னவென
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???
எந்தனின் தலையெழுத்தென்னவென
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???
Tuesday, May 13, 2014
இதற்குப்பெயர்தானோ காதல்??
அன்னையாக இருப்பேனென்றவனுக்கு -வெறும்
புண்களை மட்டுமே கொடுக்கமுடிந்தது
தன்னையே அன்பாக்குவேனென்றவனுக்கு -ஏனோ
கண்ணீரையே இலகுவாக தரமுடிந்தது
இதற்குப்பெயர்தானோ காதல் உலகில்
இதனைத்தானோ அன்பென்கின்றார்கள்???
புண்களை மட்டுமே கொடுக்கமுடிந்தது
தன்னையே அன்பாக்குவேனென்றவனுக்கு -ஏனோ
கண்ணீரையே இலகுவாக தரமுடிந்தது
இதற்குப்பெயர்தானோ காதல் உலகில்
இதனைத்தானோ அன்பென்கின்றார்கள்???
Wednesday, May 7, 2014
பிரிந்து செல்வதில் பிழையென்ன???
>>>>>>>> >>>>>>>>> >>>>>>>> >>>>>>>
ஒத்துப்போகவில்லையெனில்
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???
சீர்வரிசைகளென்று தந்தையின்
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???
பத்துமாதம் சுமந்துபெற்ற பிள்ளை
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???
அலுவலகத்திற்கு ஒரு(வன்)த்தி
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???
பிந்திய சிலநாட்களில்
எந்தனின் தலையெழுத்தென்னவென
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???
ஒத்துப்போகவில்லையெனில்
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???
சீர்வரிசைகளென்று தந்தையின்
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???
பத்துமாதம் சுமந்துபெற்ற பிள்ளை
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???
அலுவலகத்திற்கு ஒரு(வன்)த்தி
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???
பிந்திய சிலநாட்களில்
எந்தனின் தலையெழுத்தென்னவென
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???
ஊடறு இணைய இதழில் எனது காதலுக்கு கண்ணில்லையென்று?? என்ற கவிதை (07.05.2014)
காதலிக்கவென்றால் ஒரு
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ
அழகிருக்கனும் கொஞ்சம்
அந்தஸ்துமிருக்கனும்
அந்தஸ்துமிருக்கனும்
படித்திருக்கனும் லேசாய்
பளபளப்புமிருக்கனும்
பளபளப்புமிருக்கனும்
தொழிலிருக்கனும் அதிலும்
கொழுத்த வரவிருக்கனும்
கொழுத்த வரவிருக்கனும்
மெலிவாயிருக்கனும் மேனி
பொழிவாயுமிருக்கனுமாம்
பொழிவாயுமிருக்கனுமாம்
ம்ம்ம்ம்
இதுக்குத்தான் சொன்னார்களோ
இதுக்குத்தான் சொன்னார்களோ
காதலுக்கு கண்ணில்லையென்று??
அப்போ
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்
அப்படியென்றால்
எதனை காதலிக்கின்றார்கள்??
எதனை காதலிக்கின்றார்கள்??
Monday, May 5, 2014
தமிழ்லீடர் இணைய இதழில் எனது கவிதை (04.05.2014)
http://tamilleader.com/?p=32738
மணித்தியாலங்களோ
இருபத்துநான்கு -உனை
மனதுக்குள் நினைப்பதோ
நொடிகளின் எண்ணைக்கை
இருபத்துநான்கு -உனை
மனதுக்குள் நினைப்பதோ
நொடிகளின் எண்ணைக்கை
வேறு சிந்தைகள் கடந்தாலும்
மாறாக எதனைச் செய்தாலும்
ஆறாக ஓடுவதென்னவோ
மாறாத உன் ஞாபகந்தான்
மாறாக எதனைச் செய்தாலும்
ஆறாக ஓடுவதென்னவோ
மாறாத உன் ஞாபகந்தான்
அன்றாடங்களின் கடக்கும்
ஆயிரம் அதிசயங்கள் இருக்க
வென்று கொண்டிருப்பதென்னவோ
நினதான நினைவுகளே
ஆயிரம் அதிசயங்கள் இருக்க
வென்று கொண்டிருப்பதென்னவோ
நினதான நினைவுகளே
எதிர்ப்புக்கள் எனக்கெதிராய்
எழும்பிவந்த போதெல்லாம்
எடுத்தெறிந்து விடத்தானெத்தனித்தேன்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்ததென்னவோ
எமக்குளுண்டான நேசம்மட்டுமே
எழும்பிவந்த போதெல்லாம்
எடுத்தெறிந்து விடத்தானெத்தனித்தேன்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்ததென்னவோ
எமக்குளுண்டான நேசம்மட்டுமே
அது என்னவோ
இங்குமட்டுந்தான்
விலக நினைக்கும்போதெல்லாம்
விடாமல் ஒட்டிக்கொள்வதும் நினைவுகளில்
விடாப்பிடியாய் கட்டிக்கொள்வதும்…
விலக நினைக்கும்போதெல்லாம்
விடாமல் ஒட்டிக்கொள்வதும் நினைவுகளில்
விடாப்பிடியாய் கட்டிக்கொள்வதும்…
ஒன்றே தெய்வமென்றால்
காதலும் ஒன்றல்லவோ
ஒருவனே தேவனென்றால்
ஒருவருக்கு ஒருவரன்றோ
காத(லி)லன்
காதலுக்கு சாட்சியாய்
காத்துக்கிடக்கின்றது -நம்
காதல்
நாளைய
சரித்திரத்தை நிரப்பிவிட
காதல் ஆழமானதென்று!!
காதலும் ஒன்றல்லவோ
ஒருவனே தேவனென்றால்
ஒருவருக்கு ஒருவரன்றோ
காத(லி)லன்
காதலுக்கு சாட்சியாய்
காத்துக்கிடக்கின்றது -நம்
காதல்
நாளைய
சரித்திரத்தை நிரப்பிவிட
காதல் ஆழமானதென்று!!
Friday, May 2, 2014
அதிகம் மென்மைவாய்ந்தது!!
மனிதனுக்குள் இருக்கின்ற மிருகம் மிகவும் பயங்கரமானவன்
மிருகத்துக்குள் இருக்கும் மனிதமோ அதிகம் மென்மைவாய்ந்தது!!
மிருகத்துக்குள் இருக்கும் மனிதமோ அதிகம் மென்மைவாய்ந்தது!!
Wednesday, April 30, 2014
Tuesday, April 29, 2014
Monday, April 28, 2014
அட கட்டையில போக...
இரவு 7மணிக்குப்பின் வெளியில் சென்றுவரும், முகநூலில் இருக்கும், தொலைபேசியில் பேசும் போன்ற இதர வேலைகளில் ஈடுபடும் பெண்கள் பற்றி நாகரிக வளர்ச்சியடைந்த சமூகத்தின் பார்வையில் ஆரோக்கியம் இல்லை. கோணலும் மாணலுமாய் கொள்ளிக்கட்டைவைக்குமளவுக்கு கொடுரமாய் இருக்கிறது அதற்கு ஒரு சிறிய உதாரணம்.
சுவாரஸ்யமான ஒரு கவிதை நூலினை வாசித்த களைப்போடு அதன் விமர்சனத்தையும் எழுதவேண்டுமென நினைத்து அதனையும் நிறைவேற்றிவிட்டு நிமிர்கையில் நேரம் இரவு பத்துமணியை தாண்டிவிட்டது. அப்போதுதான் தெரியும் நூலின் முகப்பட்டை என்னிடம் இருக்கவில்லை எப்படி இதனை பிரசுரிப்பது என எண்ணியவாறு நூலாசிரியருக்கு குறுஞ்செய்தியனுப்பினேன் மின்னஞ்சலில் முகப்பட்டையை அனுப்புமாறு. குறுஞ்செய்தி 'நான் போய்விட்டேன்' என்று சைகை காட்டியபின்னர்தான் என் மண்டைக்கு ஒரு விடயம் உறைத்தது. இத்தனை மணிக்கு ஒரு ஆண் நண்பருக்கு அதுவும் முதன்முதலில் குறுஞ்செய்தி அனுப்புகின்றோமே அவர் என்னைபற்றி என்ன நினைப்பார் ஏதாவது தவறாக நினைக்கக்கூடுமோ என அங்கலாக்கத்தொடங்கினேன். "அட இந்த பொண்ணு என்னடா, ஏன் அப்படி யோசிக்கிறீங்க உங்கள யார் தப்பா நினைக்கபோறாங்க அல்லது தப்பா நினைக்க இதில் என்ன இருக்கின்றது?" என்று நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அப்படி ஒரு எண்ணம் எனக்கு முதன்முதலாய் வருவதற்கு ஒரு பெரிய காரணம் இதுதான்.
அந்த பெண்மணி சமூசத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் சமூகத்திற்கு பிரயோசனமான பல தளங்களில் செயலாற்றும் ஒருவர். அதிகாலைமுதல் வீடுவேலைகளோடு போராடி பின்னர் தொழில், பொறுப்புக்கள், கடமை, குழந்தை என இயங்கிவிட்டு இரவு வேளைகளிலே தனது இதர விடயங்களைக்கவனிப்பார் பத்திரிகை, முகநூல், எழுத்து போன்றன அப்படி ஒருநாள் இரவு முகநூலினை பயன்படுத்தும்போது (அவர் நேரத்தை கவனிக்கவில்லை) ஒரு ஆண் அவருக்கு ல் செய்தியனுப்பிக்கொண்டிருந்தார் தனது தந்தை வயதிலிருக்கும் ஒருவர் என்ற ரீதியில் அவரும் பதிலளித்திருக்கின்றார் சில கேள்வி பரிமாற்றத்தின் பின்னர் அவர் தவறான எண்ணங்களுடன் வார்த்தைகளை பிரயோகித்திருக்கின்றார் அதற்கு நல்ல பதிலடியினை கொடுத்துவிட்டு நேரத்தைப்பார்க்கையில் நேரமோ பன்னிரெண்டை தாண்டிக்கொண்டிருக்கின்றது இந்த நேரத்தில் ஒரு பெண் முகநூலில் இருப்பதுகூட தவறான சிந்தனையை ஏற்படுத்துமா? இரவு 7 மணிக்குப்பின்னர் பெண்களின் தரம் கணிக்கப்படும் விதங்கள் சரியானதா? இதற்கான விடை கிடைக்கப்போவதில்லை இப்படிப்பட்ட பார்வைகள் மாறுவதற்கு இந்த கருத்துமட்டும் போதுமானதில்லை என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும் ஆதங்கத்தை கொட்டிக்கொள்வதற்காக மட்டுமே இந்தப்பதிவு, திருத்துவதற்காக அல்ல......
சுவாரஸ்யமான ஒரு கவிதை நூலினை வாசித்த களைப்போடு அதன் விமர்சனத்தையும் எழுதவேண்டுமென நினைத்து அதனையும் நிறைவேற்றிவிட்டு நிமிர்கையில் நேரம் இரவு பத்துமணியை தாண்டிவிட்டது. அப்போதுதான் தெரியும் நூலின் முகப்பட்டை என்னிடம் இருக்கவில்லை எப்படி இதனை பிரசுரிப்பது என எண்ணியவாறு நூலாசிரியருக்கு குறுஞ்செய்தியனுப்பினேன் மின்னஞ்சலில் முகப்பட்டையை அனுப்புமாறு. குறுஞ்செய்தி 'நான் போய்விட்டேன்' என்று சைகை காட்டியபின்னர்தான் என் மண்டைக்கு ஒரு விடயம் உறைத்தது. இத்தனை மணிக்கு ஒரு ஆண் நண்பருக்கு அதுவும் முதன்முதலில் குறுஞ்செய்தி அனுப்புகின்றோமே அவர் என்னைபற்றி என்ன நினைப்பார் ஏதாவது தவறாக நினைக்கக்கூடுமோ என அங்கலாக்கத்தொடங்கினேன். "அட இந்த பொண்ணு என்னடா, ஏன் அப்படி யோசிக்கிறீங்க உங்கள யார் தப்பா நினைக்கபோறாங்க அல்லது தப்பா நினைக்க இதில் என்ன இருக்கின்றது?" என்று நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அப்படி ஒரு எண்ணம் எனக்கு முதன்முதலாய் வருவதற்கு ஒரு பெரிய காரணம் இதுதான்.
அந்த பெண்மணி சமூசத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் சமூகத்திற்கு பிரயோசனமான பல தளங்களில் செயலாற்றும் ஒருவர். அதிகாலைமுதல் வீடுவேலைகளோடு போராடி பின்னர் தொழில், பொறுப்புக்கள், கடமை, குழந்தை என இயங்கிவிட்டு இரவு வேளைகளிலே தனது இதர விடயங்களைக்கவனிப்பார் பத்திரிகை, முகநூல், எழுத்து போன்றன அப்படி ஒருநாள் இரவு முகநூலினை பயன்படுத்தும்போது (அவர் நேரத்தை கவனிக்கவில்லை) ஒரு ஆண் அவருக்கு ல் செய்தியனுப்பிக்கொண்டிருந்தார் தனது தந்தை வயதிலிருக்கும் ஒருவர் என்ற ரீதியில் அவரும் பதிலளித்திருக்கின்றார் சில கேள்வி பரிமாற்றத்தின் பின்னர் அவர் தவறான எண்ணங்களுடன் வார்த்தைகளை பிரயோகித்திருக்கின்றார் அதற்கு நல்ல பதிலடியினை கொடுத்துவிட்டு நேரத்தைப்பார்க்கையில் நேரமோ பன்னிரெண்டை தாண்டிக்கொண்டிருக்கின்றது இந்த நேரத்தில் ஒரு பெண் முகநூலில் இருப்பதுகூட தவறான சிந்தனையை ஏற்படுத்துமா? இரவு 7 மணிக்குப்பின்னர் பெண்களின் தரம் கணிக்கப்படும் விதங்கள் சரியானதா? இதற்கான விடை கிடைக்கப்போவதில்லை இப்படிப்பட்ட பார்வைகள் மாறுவதற்கு இந்த கருத்துமட்டும் போதுமானதில்லை என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும் ஆதங்கத்தை கொட்டிக்கொள்வதற்காக மட்டுமே இந்தப்பதிவு, திருத்துவதற்காக அல்ல......
Sunday, April 27, 2014
'யசோதரா வித்தியாலய' த்தின் நம்பிக்கை நாயகி....
நாளைய தலைவர்களென நாம் நாளாந்தம் பிரயத்தனம் கொள்வதும், அவர்களை சமூகத்திற்கு சிறந்தவர்களாக கொண்டுசேர்ப்பதும் இன்றைய தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதனை எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம்? குடும்பத்திலிருந்து ஆரம்பித்து சமூகத்தின் பல கட்டங்களிலும் இப்பொறுப்பினை உடையோர் பலர். இதில் மிக முக்கியமாக 'பாடசாலை' எனும் கட்டமைப்பே ஒரு நல்ல பிரஜையின் வாழ்க்கைக்களமாக அங்கம் வகிக்கின்றது.
எத்தனை பாடசாலைகளில் இதனை காணமுடிகின்றது எத்தனை அதிபர், ஆசிரியர்கள் இவ்விடயத்தில் உதாரணமாக திகழ்கின்றார்கள் என்பதனை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுபோல அத்தொகையினரை கண்டுகொள்வதும் எமது கடமையே ஏனெனில், அவர்களின் சேவையினையும் கடமைகளையும், உழைப்பு தியாகங்களையும் உலகறியச்செய்யவேண்டும் இது அவர்களின் முகஸ்துதிக்காக அல்ல, இவர்களை மற்றவர்களுக்கு உதாரணக்கர்த்தாக்களாக படிப்பினையாக பறைசாற்றவேண்டும்.
இப்படியான பொறுப்புவாய்ந்த இன்றைய தலைவர்கள் நம்மத்தியில் அநேகர் இருந்தாலும் இங்கு நான் குறிப்பிட்டுச்சொல்ல வருவது, இவரைத்தான் இலங்கையின் தலைநகரில் பிரசித்திபெற்ற பெண்கள் பாடசாலையான (சகோதரமொழி) 'யசோதரா வித்தியாலயம்'. இது சுமார் 168 வருட பழமைவாய்ந்த தற்போது அபரிதமான வளர்ச்சிகண்டுள்ள பாடசாலையின் அதிபர், கேர்னல் திருமதி அஜந்தா குமாரி பகாத்கும்புர அவர்களே.
சட்டம், நீதி, நேர்மை, கடமை பொறுப்பு என்பவற்றிற்கு ஒரு உருவத்தை காட்டவேண்டுமென்றால் இவ்வதிபரை முன்னிறுத்துவது பொறுத்தமாக இருக்கும். பாடசாலை என்பது என்ன? மாணவர்கள் என்பவர் யாவர்? ஆசிரியர்களின் கடமை என்ன? மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு என்ன? என்பதனை ஒவ்வொரு செயற்பாடுகளிலும் உணர்த்துபவராக வலியுறுத்துபவராகவே அதிபர் அவர்கள் செயற்படுகின்றார். ஊழல்கள் குற்றங்கள் நடைபெறுகின்ற அதியுன்னத பதவிகளில் இப்பாடசாலை அதிபர் விதிவிலக்கானவர்.
பாடசாலை வளாகம், வகுப்பறைகள், நூலகம் மற்றும் இதர வசதிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் முனைப்பாக இருக்குமிவர், ஒவ்வொரு பாடவேளைகளும் எவ்வளவு முக்கியம், அதில் மாணவர்களின் வாழ்க்கை, எதிர்காலம் தங்கியுள்ள விதங்களை புகுத்திக் கொண்டேயிருப்பதால் சில ஆசிரியர்கள் இவரோடு முரண்பட்டு கோபப்பட்டாலும் தக்க சமயங்களில் அதிபரின் கருத்துக்கள் செயற்பாடுகளில் இருக்கும் உண்மையினை ஏற்றுக்கொண்டதும் இல்லாமலில்லை. அடிக்கடி கூட்டப்படும் ஆசிரிய ஊழியர்களின் பொதுக்கூட்டத்தில் மாணவர்களின் நலனைப்பற்றிய கருத்துக்களையே அதிகமாக சுட்டிக்காட்டி ஆசிரியர்களை எச்சரிப்பவராகவே தெரிகின்றார். பொதுவாகவே இவரின் தொழில் தர்மத்தின் பரந்துபட்ட கோர்வைகளை புள்ளியிடல் மூலம் தெரிவிப்பது பலருக்கு படிப்பினையாகவும் சுருக்கமாகவும் இருக்குமென நினைக்கின்றேன்.
01. நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கும் மனசாட்சிக்கும் உண்மையாக உழைக்கின்றீர்களா?
02. மாணவர்களின் பள்ளிக்காலத்தின் முக்கியத்தைக்கூறி, எந்த ஒரு மாணவியையும் எந்த செயற்பாட்டிலிருந்தும் ஒதுக்காமல் ஏதாவதொரு நிகழ்வில் புகுத்தியே ஆகவேண்டுமென்பது இவரின் கொள்கை. படிக்கமுடியாத ஒரு மாணவி வேறு துறைகளில் ஆர்வமுள்ளவளாக திறமையுள்ளவளாக இருக்கலாம் அதனை கண்டறிவது ஒவ்வொரு ஆசிரியரினதும் கடமை.
03. வகுப்பில் மாணவர்கள் அடங்காமல் குரலெழுப்பிக்கொண்டிருப்பது ஆசிரியர்களின் பெருங்குறையே அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது எவ்வாறு என்பதனை அறிந்துவைத்திருக்கவேண்டும். (வன்மையாக தண்டிப்பதும், அடிப்பதும் கட்டாயமாக விலக்கப்பட்டுள்ளது)
04. எல்லா மாணவருக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும்
05. மாதாமாதம் செய்யவேண்டிய ஒப்படைகள், கணிப்பீடுகள் என்பன காலக்கிரமத்தில் செய்துமுடித்திருக்கவேண்டும்.
06. எந்த ஒரு விடயத்திலும் 100% நேர்த்தியையும், காலத்திற்கு செய்துமுடித்திருக்கவும் வேண்டும்
07. வகுப்பறையில் ஆசிரியர் உட்கார்ந்துகொண்டு கற்பிக்கக்கூடாது நின்றுகொண்டு சகலரையும் தம் பார்வையில் கணித்துக்கொண்டேயிருக்கவேண்டும்.
08. ஒழுக்கமும் ஒழுங்குவிதிகளும் சற்றேனும் பிரளாமல் நடக்கவேண்டும்.
09. ஆசிரியர்கள் மாணவர்களிடம் நண்பர்களாக அல்ல நல்ல ஆசானாகவே பழகவேண்டும்.
10. பாடசாலையே அனைத்திற்குமான களம் இக்காலகட்டத்தில் மாணவர்களுக்குள்ள திறமைகள் அத்தனையும் வெளிக்கொணரப்பட்டு பயிற்றப்படவேண்டுமென்ற தாரகமந்திரம் மெய்ப்படவேண்டும்.
என்று சீரான திட்டங்களும் வரைமுறைகளையும் கொண்டுள்ள இவ்வதிபர், பல ஊடக அச்சுறுத்தல்களுக்கும், மொட்டைக்கடதாசிகளுக்கும் உட்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடி' என்பதற்கிணங்க அவர் இதற்கெல்லாம் சளைத்து ஒதுங்கிவிடவுமில்லை, விலகி வழிவிடவுமில்லை. நேர்பட்ட வழிகளில் இடறல்களுக்கும் குறுக்கீடுகளுக்கும் வலிமையில்லை என்பதனை ஆணித்தரமாக நிரூபித்து தனது செவ்வையான வழியில் நாட்டுக்கும் நாளைய தலைமையுருவாக்கத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்றார். ஒரு பெண்ணாக சாதித்துக்கொண்டிருக்கும் இத்தலைவியானவர் சரித்திரத்தின் நாயகியே
08. ஒழுக்கமும் ஒழுங்குவிதிகளும் சற்றேனும் பிரளாமல் நடக்கவேண்டும்.
09. ஆசிரியர்கள் மாணவர்களிடம் நண்பர்களாக அல்ல நல்ல ஆசானாகவே பழகவேண்டும்.
10. பாடசாலையே அனைத்திற்குமான களம் இக்காலகட்டத்தில் மாணவர்களுக்குள்ள திறமைகள் அத்தனையும் வெளிக்கொணரப்பட்டு பயிற்றப்படவேண்டுமென்ற தாரகமந்திரம் மெய்ப்படவேண்டும்.
என்று சீரான திட்டங்களும் வரைமுறைகளையும் கொண்டுள்ள இவ்வதிபர், பல ஊடக அச்சுறுத்தல்களுக்கும், மொட்டைக்கடதாசிகளுக்கும் உட்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடி' என்பதற்கிணங்க அவர் இதற்கெல்லாம் சளைத்து ஒதுங்கிவிடவுமில்லை, விலகி வழிவிடவுமில்லை. நேர்பட்ட வழிகளில் இடறல்களுக்கும் குறுக்கீடுகளுக்கும் வலிமையில்லை என்பதனை ஆணித்தரமாக நிரூபித்து தனது செவ்வையான வழியில் நாட்டுக்கும் நாளைய தலைமையுருவாக்கத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்றார். ஒரு பெண்ணாக சாதித்துக்கொண்டிருக்கும் இத்தலைவியானவர் சரித்திரத்தின் நாயகியே
இவரின் கொள்கைகள் நம்நாட்டில் பல பாடசாலைகளுக்கு படிப்பினையாகட்டும், ஆசிரிய சேவையின் மகத்துவங்கள் அறியப்படட்டும். 'ஆசிரியத்துவம்' என்பது வெறும் பணமீட்டும் தொழில் மட்டுமல்ல, அது தியாகம், கடமை, பொறுப்பு, அர்ப்பணிப்பு, தாய்மை இப்படித்தான் இத்தொழில்புரிவோர் யாவரும் உணரவேண்டும். அதனை சரியாக உணர்ந்து செயற்படும் அதிபர் அஜந்தா குமாரி பகத்கும்புர அவர்களைப்போல சகல பாடசாலைகளிலும் தலமைத்துவம் இருக்குமாயின் குறைபாடுள்ள ஆசிரிய, மாணவ சமூகங்கள் தழைத்தோங்கும். இதுவெறும் அதிபருக்கான பாராட்டல்ல சகலருக்குமான பாடம் இதைப்போன்று இலைமறைகாயாக இருக்கும் ஏனைய தலைமைத்துவங்களையும் கண்டறிவோம் அந்த விளக்குகளை மலையுச்சியில் ஏற்றிவைப்போம் பல இரு(ளு)ளில்லங்கள் பிரகாசிக்கட்டும்
இனம் மதம் மொழி கடந்து மனிதர்களைத்தேடி மகத்துவங்களை மட்டுமே நாடிக்கொண்வோம் நாளைய எதிர்காலம் நமதாகட்டும்.
நன்றி
த.ராஜ்சுகா
இனம் மதம் மொழி கடந்து மனிதர்களைத்தேடி மகத்துவங்களை மட்டுமே நாடிக்கொண்வோம் நாளைய எதிர்காலம் நமதாகட்டும்.
நன்றி
த.ராஜ்சுகா
Friday, April 25, 2014
காதலுக்கு கண்ணில்லையென்று??
காதலிக்கவென்றால் ஒரு
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ,
அழகிருக்கனும் கொஞ்சம்
அந்தஸ்துமிருக்கனும்
படித்திருக்கனும் லேசாய்
பளபளப்புமிருக்கனும்
தொழிலிருக்கனும் அதிலும்
கொழுத்த வரவிருக்கனும்
மெலிவாயிருக்கனும் மேனி
பொழிவாயுமிருக்கனுமாம்
ம்ம்ம்ம்
இதுக்குத்தான் சொன்னார்களோ
காதலுக்கு கண்ணில்லையென்று??
அப்போ
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்
அப்படியென்றால்
எதனை காதலிக்கின்றார்கள்??
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ,
அழகிருக்கனும் கொஞ்சம்
அந்தஸ்துமிருக்கனும்
படித்திருக்கனும் லேசாய்
பளபளப்புமிருக்கனும்
தொழிலிருக்கனும் அதிலும்
கொழுத்த வரவிருக்கனும்
மெலிவாயிருக்கனும் மேனி
பொழிவாயுமிருக்கனுமாம்
ம்ம்ம்ம்
இதுக்குத்தான் சொன்னார்களோ
காதலுக்கு கண்ணில்லையென்று??
அப்போ
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்
அப்படியென்றால்
எதனை காதலிக்கின்றார்கள்??
Subscribe to:
Posts (Atom)
.jpg)






.jpg)




