உண்மைக்காதல்
பணக்காரனின்
ஆடைபோ லல்ல
பைத்தியக்காரனின்
ஆடைபோல
மரணம்வரை
மாற்றப்படுவதேயில்லை!!
Thursday, November 14, 2013
Monday, November 11, 2013
Saturday, November 9, 2013
ஒளிதான் ஒளிதான்
தோல்வியை தூக்கி
தோளில் போடாதே
துரோகியை நெஞ்சில்
தொங்கப் போடாதே
வலிதான் வலிதான்
வாழ்வெல்லாம் வழிதான்
துக்கத்தை துடைத்து
தூரப்போட்டுவிடு
ஒளிதான் ஒளிதான் -உன்
நிமிடங்களில் ஒளிதான்
ஒழித்தால் பாரத்தை -உன்
நிழல்கூட ஒளிதான்
நேசிப்பும் சிலநேரம்
வியாதியாகும் நிஜம்தான்
யோசித்து நடந்திடால்
விலகியோடும் பனியாய்
கண்ணீரை கருத்தினில்
எடுப்பதை நிறுத்து
பொன்நேரம் உனதாகும்
இந்நாளை உயர்த்து
பின்னிட்டு நடந்திட்டால்
பூச்சிகூட விரட்டும்
புறமுதுகை திருப்பிவிட்டால்
புயல்கூட ஒதுங்கும்
வேங்கையென வெற்றியை
வெறியோடு யாசி
தீங்குவரும் நாளில்கூட
தீராது யோசி
நெஞ்சத்து கண்ணீரை
நொடிதனில் மாற்று
அஞ்சாமை வாழ்வதனை
தீராது போற்று
கொஞ்சமாய் முயன்றாலே
கொடிபறக்கும் முன்னாலே
வஞ்சனை கொன்றாலே
வழிபிறக்கும் தன்னாலே
உறவுதரும் காயந்தான்
உள்ளஞ்சிதைக்கும் உண்மைதான்
வரவிலதனை சேர்க்காவிட்டால்
வசந்தம் தந்திடும் நன்மைதான்
தோல்வியை தூக்கி
தோளில் போடாதே!!
தோளில் போடாதே
துரோகியை நெஞ்சில்
தொங்கப் போடாதே
வலிதான் வலிதான்
வாழ்வெல்லாம் வழிதான்
துக்கத்தை துடைத்து
தூரப்போட்டுவிடு
ஒளிதான் ஒளிதான் -உன்
நிமிடங்களில் ஒளிதான்
ஒழித்தால் பாரத்தை -உன்
நிழல்கூட ஒளிதான்
நேசிப்பும் சிலநேரம்
வியாதியாகும் நிஜம்தான்
யோசித்து நடந்திடால்
விலகியோடும் பனியாய்
கண்ணீரை கருத்தினில்
எடுப்பதை நிறுத்து
பொன்நேரம் உனதாகும்
இந்நாளை உயர்த்து
பின்னிட்டு நடந்திட்டால்
பூச்சிகூட விரட்டும்
புறமுதுகை திருப்பிவிட்டால்
புயல்கூட ஒதுங்கும்
வேங்கையென வெற்றியை
வெறியோடு யாசி
தீங்குவரும் நாளில்கூட
தீராது யோசி
நெஞ்சத்து கண்ணீரை
நொடிதனில் மாற்று
அஞ்சாமை வாழ்வதனை
தீராது போற்று
கொஞ்சமாய் முயன்றாலே
கொடிபறக்கும் முன்னாலே
வஞ்சனை கொன்றாலே
வழிபிறக்கும் தன்னாலே
உறவுதரும் காயந்தான்
உள்ளஞ்சிதைக்கும் உண்மைதான்
வரவிலதனை சேர்க்காவிட்டால்
வசந்தம் தந்திடும் நன்மைதான்
தோல்வியை தூக்கி
தோளில் போடாதே!!
Thursday, November 7, 2013
Wednesday, November 6, 2013
உதிரம்சொட்டும் உபத்திரவம்!!
இதயம் முறுக்கி
இமைகள் பிழிந்து
உதிர்த்துவிடும்
இதய ஓலங்கள்
அர்த்தம் சிதைத்த
அன்பின் தடயங்கள்
அமிழ்ந்த ழிகின்றது
ஆதாரமின்றி...
எதிர்பார்ப்புக்கள்
உடைபடுவதால் மட்டுமே
எஞ்சிக்கொண்டேபோகின்றது
எளிமைநேசம்
தொடர்ந்திடும்
துரோகங்கள்
வாய்மொழிக்களவுகள்
வார்த்தைவழியே
சிதறிவெடிக்க
உதிரம்சொட்டும்
உபத்திரவம்
இதயவறைக்குள் மட்டும்
உண்மைகள் தவறிய
உறவுகள்
உள்ளத்தை தொலைத்த
அவர்கள்
சிலிர்ப்புக்களோ
சிந்தனைகளோ
எதிர்படாமல்
நீரோட்டமாய் ஓட
நீதியைத்தேடும்
எனதுள்ளம் மட்டும்
ஏமாற்றத்தின்
பிரதிநிதியாய்
பின்வாங்கிக்கொண்டிருக்கின்றது!!
இமைகள் பிழிந்து
உதிர்த்துவிடும்
இதய ஓலங்கள்
அர்த்தம் சிதைத்த
அன்பின் தடயங்கள்
அமிழ்ந்த ழிகின்றது
ஆதாரமின்றி...
எதிர்பார்ப்புக்கள்
உடைபடுவதால் மட்டுமே
எஞ்சிக்கொண்டேபோகின்றது
எளிமைநேசம்
தொடர்ந்திடும்
துரோகங்கள்
வாய்மொழிக்களவுகள்
வார்த்தைவழியே
சிதறிவெடிக்க
உதிரம்சொட்டும்
உபத்திரவம்
இதயவறைக்குள் மட்டும்
உண்மைகள் தவறிய
உறவுகள்
உள்ளத்தை தொலைத்த
அவர்கள்
சிலிர்ப்புக்களோ
சிந்தனைகளோ
எதிர்படாமல்
நீரோட்டமாய் ஓட
நீதியைத்தேடும்
எனதுள்ளம் மட்டும்
ஏமாற்றத்தின்
பிரதிநிதியாய்
பின்வாங்கிக்கொண்டிருக்கின்றது!!
Tuesday, November 5, 2013
பிரிவிலே
தீயில் வேகும் தங்கம்
தீபமாய் பிரகாசிப்பதுபோல
பிரிவிலே தொடரும் நாட்கள்
உறவின் உறுதியை அதிகரிக்கின்றது!!
தீபமாய் பிரகாசிப்பதுபோல
பிரிவிலே தொடரும் நாட்கள்
உறவின் உறுதியை அதிகரிக்கின்றது!!
நீங்கிவிடுகின்றேன்
என்நினைவுகள் தொலைந்த
உன் பொழுதுகளில்
நிம்மதி நிலைக்குதென்றால்
நீங்கிவிடுகின்றேனுன்னை
நிலவைத்தொலைத்த வானமாய்!!
உன் பொழுதுகளில்
நிம்மதி நிலைக்குதென்றால்
நீங்கிவிடுகின்றேனுன்னை
நிலவைத்தொலைத்த வானமாய்!!
Saturday, November 2, 2013
கண்ணீர்ச்சமூத்திரம்
நீயெனக்கு
தருவதற்கின்னும் என்ன இருக்கின்றது
தாராளமாய் போதுமே இந்த
தாளாத கண்ணீர்ச்சமூத்திரம்
ஜென்ம ஜென்மங்களுக்கும்!!
தருவதற்கின்னும் என்ன இருக்கின்றது
தாராளமாய் போதுமே இந்த
தாளாத கண்ணீர்ச்சமூத்திரம்
ஜென்ம ஜென்மங்களுக்கும்!!
தேடிக்கொண்டிருக்கின்றேன்!!
தேடிக்கொண்டிருக்கின்றேன்
தொலைந்துவிட்ட என்னையும்
என்னிடமிருந்து தொலைந்ததையும்
நான் நினைக்கவில்லை அவை
கிடைக்குமென்று மீண்டும் -நீ
திரும்பியென்னிடம் வராவிட்டால்!!
தொலைந்துவிட்ட என்னையும்
என்னிடமிருந்து தொலைந்ததையும்
நான் நினைக்கவில்லை அவை
கிடைக்குமென்று மீண்டும் -நீ
திரும்பியென்னிடம் வராவிட்டால்!!
மயானம்
மரணவாசல்வரை செல்வதும்
மனதுக்குளுன் நினைவுவந்ததும்
மறுபடியும் திரும்பிவருவதுமாய் என்
மயானம் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது..
மனதுக்குளுன் நினைவுவந்ததும்
மறுபடியும் திரும்பிவருவதுமாய் என்
மயானம் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது..
என்னுடைய ஒருவனாய்.....
திடீரென்று வரவேண்டும்
தென்றலாய் வரவேண்டும்
ஒவ்வாமையில் தொடங்கி
ஒத்துப்போதலே தொடரவேண்டும்
கண்களால் கவர்ந்து
கதைகள் பலபேசியே
காலங்கடத்தாது
காலத்தை பிரதிபலித்தே
கடமைகளை பிரதியெடுத்தே
காதலை வளர்க்கவேண்டும்
இயல்பாக பேசவேண்டும்
இதயத்தில் உண்மைவேண்டும்
வெளிப்படையாய் இருக்கவேண்டும்
வெறுமைகளை விரட்டவேண்டும்
போலிசாசனங்களை புதைக்கவேண்டும்
வேலித்தடைகளை உடைக்கவேண்டும்
கண்காணா தேசத்தில் கட்டிவைப்பினும்
கற்பகலா இதயமுணரும் காதல்வேண்டும்
காதல்வேதத்தின் அத்தியாயமென்ற
கறைபடித்த போக்கினை
களைந்திட்ட காளையாயிருந்திட வேண்டும்
எனக்கென்று எதேட்சையாய் வரவேண்டும்
ஏராளமான எதிர் பார்ப்புக்களில்லாது
ஏளனமான எதிர்ப்புக்களில்லாது
என்னுடைய ஒருவனாய் வந்திடவேண்டும்
Wednesday, October 30, 2013
சொல்லியழும்!!
தனிமைத்தீயினை
தாராளமாய்க் கொளுத்திவிட்டு
தள்ளிநின்று பார்க்கின்றாய்
ஈவிரக்கங்களை குடித்துவிட்ட -உன்
இதயத்திடம் கேட்டுப்பார்
இறந்துகொண்டிருக்குமென்
இறவாக்காதலை சொல்லியழும்!!
தாராளமாய்க் கொளுத்திவிட்டு
தள்ளிநின்று பார்க்கின்றாய்
ஈவிரக்கங்களை குடித்துவிட்ட -உன்
இதயத்திடம் கேட்டுப்பார்
இறந்துகொண்டிருக்குமென்
இறவாக்காதலை சொல்லியழும்!!
Monday, October 28, 2013
பாவத்தீயை பற்றவைத்துவிட்டீர்!!
அல்லல்கள் எமக்கொன்றும்
ஆச்சரியங்களில்லை
அழுகைகள் இங்கொன்றும்
அதிசயங்களில்லை
சொத்துக்களை இழந்ததாலா
சோர்ந்துபோனேமென்றீர் இல்லை
சொந்தங்களை பறித்ததாலல்லவோ
சோபையிழந்துபோனோம்
அன்னையை தந்தையை
அண்ணனை தம்பியை தொலைத்து
அநாதைகளானோம் மகுடமாய்
அகதிகளாயுமானோம்
கணவனை மனைவியை
கண்ணான எம்சொந்தங்களை
கண்ணீருக்குள் தொலைத்திட்டு
கதி(ளை)யிழந்துபோனோம்
கண்ணிவெடிகளுக்கு எம்
கால்களை கொடுத்தோம்
மண்ணைத்தின்றிடும் குண்டுகளுக்கு
கண்களையும் கொடுத்தோம்
அங்கங்கள் ஒவ்வொன்றையும் கொடுத்துவிட்டு
எஞ்சிய உயிரோடு இதோ
ஏதிலிக்கூட்டங்களாய்
ஏதுமறியாமல் நிற்கின்றோம்
பூமிக்குள் எங்கள்
புன்னகையை புதைத்துவிட்டு
உதடுகளை பொருத்தச்சொல்வதில்
நியாயமென்ன?
அப்பாவிகளெமது
அமைதியை குடித்துவிட்டு
ஆரவாரப்பூக்களை அள்ளித்தெளிப்பதில்
அர்த்தமென்ன?
கருவாட்டுக்குள் மொய்க்கும் ஈக்களாய்
உருமாறிப்போன எம்முலகுக்கு
ஒளிதேடியே களைத்துப்போனோம்
வருவோர் போவோரின் வார்த்தைகளுக்குள்
முடிந்துவைத்துள்ள மூச்சுக்காற்றின்
முடிச்சுக்களை அவிழ்த்துவிடுங்கள்
நாங்கள் சூறாவளியாகியுமை
மூழ்கடித்திடமாட்டோம் எங்கேனும்
முயல்கள் சிறுத்தையை
விழுங்கிவிட்டதாய் இதுவரை
கதைகளேதும் வெளியாகவில்லை
பாவத்தீயை பற்றவைத்துவிட்டீர் இனி
சாபக்காயங்கள் ஆறிவிடப்போவதில்லை!!
மறந்தேவிடுகின்றேன்.
காயங்களை கடத்திவிட்டு
கனவுகளிடமிருந்து மீண்டுவிட்டு
கண்ணீரிலிருந்து எழுந்துவிட்டு
கவலைகளிடமிருந்து விடைபெற்றுவிட்டிந்த
கலவரங்களினின்று
காணாமல் போய்விடவே
கண்விழிக்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும்
கணக்கிடுகின்றேன்
கதறியழும் குழந்தை அன்னையை
கண்டதும் அடங்கிவிடுவதைப்போல
உன் நினைவுகள் மறித்திடும்
ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும் இதனை
மறந்தேவிடுகின்றேன்....
**********.......................... **********.......................... ***********...................... *********......
கனவுகளிடமிருந்து மீண்டுவிட்டு
கண்ணீரிலிருந்து எழுந்துவிட்டு
கவலைகளிடமிருந்து விடைபெற்றுவிட்டிந்த
கலவரங்களினின்று
காணாமல் போய்விடவே
கண்விழிக்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும்
கணக்கிடுகின்றேன்
கதறியழும் குழந்தை அன்னையை
கண்டதும் அடங்கிவிடுவதைப்போல
உன் நினைவுகள் மறித்திடும்
ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும் இதனை
மறந்தேவிடுகின்றேன்....
**********.......................... **********.......................... ***********...................... *********......
அவனேயிருக்கின்றான்
தழுவிடும் தென்றலும்
தாளாத வெப்பமும்
தரைதொடும் அலைகளும்
தகித்திடும் நிலவும்
பிறந்திடும் நொடிகளும்
புகுந்திடும் நிமிடங்களும்
மறந்திடா நினைவுகளாய்
மனதை வாட்டுகின்றது
இயற்கைக்கு அப்பால் -ஒரு
இடமிருந்தால் சொல்லுங்கள்
நினைவுகளைவிட்டு
நீங்கிவிடவேண்டும்
எல்லாவற்றிலும் அவனேயிருக்கின்றான்!!
தாளாத வெப்பமும்
தரைதொடும் அலைகளும்
தகித்திடும் நிலவும்
பிறந்திடும் நொடிகளும்
புகுந்திடும் நிமிடங்களும்
மறந்திடா நினைவுகளாய்
மனதை வாட்டுகின்றது
இயற்கைக்கு அப்பால் -ஒரு
இடமிருந்தால் சொல்லுங்கள்
நினைவுகளைவிட்டு
நீங்கிவிடவேண்டும்
எல்லாவற்றிலும் அவனேயிருக்கின்றான்!!
Saturday, October 26, 2013
உறங்கவேயில்லை...
இறுகிப்போன இதயம்
இன்னுமே இயல்பாகவில்லை
இரவுகளை விரட்டும் விழிகளும்
இனிமைகளை குடிக்கும் நினைவுகளும்
இதுவரையில் உறங்கவேயில்லை
முடியவில்லை...
இப்போதுகூட நீ
விரும்புவதைப்போல என்னால்
ஆகமுடியவில்லை
ஒரு பட்டதாரியாக
ஒரு பணக்காரியாக
ஒரு அழகியாக
ஒரு அரசாங்கதொழிலாளியாக
ஆகவே முடியவில்லை
நீ விரும்புவதைப்போல
என்னால் முடியவில்லை
உன்னை விரும்புமந்த விருப்பத்தை
என்னால் விரும்பாமல் இருக்கவும்
முடியவில்லை...
விரும்புவதைப்போல என்னால்
ஆகமுடியவில்லை
ஒரு பட்டதாரியாக
ஒரு பணக்காரியாக
ஒரு அழகியாக
ஒரு அரசாங்கதொழிலாளியாக
ஆகவே முடியவில்லை
நீ விரும்புவதைப்போல
என்னால் முடியவில்லை
உன்னை விரும்புமந்த விருப்பத்தை
என்னால் விரும்பாமல் இருக்கவும்
முடியவில்லை...
எதுவுமே இன்னும் மாறவில்லை
எதுவுமே இன்னும் மாறவில்லை
எதிராக எதுவும் நிகழவில்லை
அப்போதிருந்த இதயம்
அன்றிருந்த அன்பு என்று
எதுவுமே மாற்றப்படவில்லை
அதே கனவுகள்
அதே நினைவுகள்
அதே உணர்வுகளென்று
எதிலுமே மாற்றங்களில்லை
நொடிக்கு நொடி நினைப்பது
அடிக்கடி நினைவுக்குள் புதைவதும்
பிடிக்காததுபோல் நடிப்பதும் -பின்
மடிமீதுன் கனவுகளை தாலாட்டுவதுமாய்
இன்னும் எதுவும் மாறவில்லை
பெயரிலுள்ள ஓரெழுத்தை கண்டாலே
உயிருக்குள் மகிழ்வதும்
உன் முதலெழுத்துமென் முதலெழுத்தும்
ஒன்றாக இருந்தாலே பொங்கியெழுவதும்
இப்போதுகளில்கூட ஓயவில்லை
எல்லா பாதைகளும் நம்
பயணத்தையும்
எல்லா விடயங்களிலும் -நம்
நினைவுகளுமே
நிரம்பி வழிகின்றது இனியுமிதில்
மாற்றங்கள் நிகழப்போவதில்லை
என்று தொடங்கியதோ
அன்றிலிருந்து
கண்ணீரும் காயங்களும்
வலியும் பிரிவும்
வந்து வந்துபோனாலும்
நிரந்தரமாக நீங்கிச்செல்வதை
நினைத்ததுகூட இல்லை
இன்னும் நேசிக்கின்றேன்
இன்னுமின்னு மதிகமாகவே நேசிக்கின்றேன்
விழித்துக்கொண்டிருக்கின்றேன் -இன்றும்
விழித்துக்கொண்டேயிருக்கின்றேன்
புரியவைக்கும் புத்தியில்லாமல் -காதலை
தெளியவைக்கும் அறிவில்லாமல்..
Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)


.jpg)
.jpg)







.jpg)





.jpg)