இப்போதுகூட நீ
விரும்புவதைப்போல என்னால்
ஆகமுடியவில்லை
ஒரு பட்டதாரியாக
ஒரு பணக்காரியாக
ஒரு அழகியாக
ஒரு அரசாங்கதொழிலாளியாக
ஆகவே முடியவில்லை
நீ விரும்புவதைப்போல
என்னால் முடியவில்லை
உன்னை விரும்புமந்த விருப்பத்தை
என்னால் விரும்பாமல் இருக்கவும்
முடியவில்லை...
Saturday, October 26, 2013
எதுவுமே இன்னும் மாறவில்லை
எதுவுமே இன்னும் மாறவில்லை
எதிராக எதுவும் நிகழவில்லை
அப்போதிருந்த இதயம்
அன்றிருந்த அன்பு என்று
எதுவுமே மாற்றப்படவில்லை
அதே கனவுகள்
அதே நினைவுகள்
அதே உணர்வுகளென்று
எதிலுமே மாற்றங்களில்லை
நொடிக்கு நொடி நினைப்பது
அடிக்கடி நினைவுக்குள் புதைவதும்
பிடிக்காததுபோல் நடிப்பதும் -பின்
மடிமீதுன் கனவுகளை தாலாட்டுவதுமாய்
இன்னும் எதுவும் மாறவில்லை
பெயரிலுள்ள ஓரெழுத்தை கண்டாலே
உயிருக்குள் மகிழ்வதும்
உன் முதலெழுத்துமென் முதலெழுத்தும்
ஒன்றாக இருந்தாலே பொங்கியெழுவதும்
இப்போதுகளில்கூட ஓயவில்லை
எல்லா பாதைகளும் நம்
பயணத்தையும்
எல்லா விடயங்களிலும் -நம்
நினைவுகளுமே
நிரம்பி வழிகின்றது இனியுமிதில்
மாற்றங்கள் நிகழப்போவதில்லை
என்று தொடங்கியதோ
அன்றிலிருந்து
கண்ணீரும் காயங்களும்
வலியும் பிரிவும்
வந்து வந்துபோனாலும்
நிரந்தரமாக நீங்கிச்செல்வதை
நினைத்ததுகூட இல்லை
இன்னும் நேசிக்கின்றேன்
இன்னுமின்னு மதிகமாகவே நேசிக்கின்றேன்
விழித்துக்கொண்டிருக்கின்றேன் -இன்றும்
விழித்துக்கொண்டேயிருக்கின்றேன்
புரியவைக்கும் புத்தியில்லாமல் -காதலை
தெளியவைக்கும் அறிவில்லாமல்..
Friday, October 25, 2013
கல்யாணத்தைக்கூட
காதல் தவிர
எதையுமே
எதிர்பார்க்கவில்லையென்று
என்னிடம் சொல்லியிருந்தாய் நம்
கல்யாணத்தைக்கூட
எதிர்பார்க்கவில்லையென்று
இன்றுதான் உணர்ந்துகொண்டேன்
அநாயசமாய் நீ
பிரிந்துசெல்கின்ற இந்த
பொல்லாத கணங்களில்..
எதையுமே
எதிர்பார்க்கவில்லையென்று
என்னிடம் சொல்லியிருந்தாய் நம்
கல்யாணத்தைக்கூட
எதிர்பார்க்கவில்லையென்று
இன்றுதான் உணர்ந்துகொண்டேன்
அநாயசமாய் நீ
பிரிந்துசெல்கின்ற இந்த
பொல்லாத கணங்களில்..
Monday, October 21, 2013
எழப்போவதில்லை
சூரியன் தேடுகின்றாய்
இயங்காத ஊன இதயத்தில்
உணர்வுகளை எதிர்பார்க்கின்றாய்
கல்லறை பிணத்திற்கு
காதல் கடிதம் நீட்டுகின்றாய்
கானல் நீருக்குள்
வண்ண மீன்கள் பிடிக்கின்றாய்
அமாவாசை நிலவில்
வெளிச்சத்தை விரும்புகின்றாய்
அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய -உன்
ஆக்கங்கள் எழப்போவதில்லை
நீ,
தொலைத்ததை தேடவில்லை
தொல்லையென்றெண்ணியதை நாடுகின்றாய்
வசந்தத்தில் மட்டுமே வயப்பது உன்
வாலிப விருப்பத்தின் திருப்பங்கள்
தூர்ந்துபோன தீபத்தில்
ஒளி பிரகாசிக்கப்போவதில்லை
மீண்டும் தீபமேற்றாதே.....
Friday, October 18, 2013
எல்லாரும் கேட்கின்றார்கள்
என் புன்னகையெங்கே என்று
என்னவென்று சொல்வேன்
என் புன்னகையையும் உன்னையும்
என்னிலிருந்து பிரிக்கமுடியாதென்றும் -நீ
என்னைவிட்டு பிரிந்து சென்றாயென்றும்
Labels:
குட்டிக் கவிதைகள்
Location:
Colombo, Sri Lanka
Monday, October 7, 2013
மகிழ்ச்சியை கண்ட மணித்துளிகளில்...
நாகரிக வேகத்துக்கேற்ப நளினமான வீடுகள்
நகரத்து வாசமில்லாத நல்லவர்களின் புன்னகைகள்
தூய்மையான காற்று தூபமிடும் மரங்கள்
துணைக்கு இணையாய் துள்ளியோடும் பிராணிகள்..
மனிதத்தை போற்றிடும் மனதுள்ள மனிதர்கள்
மற்றவரின் துன்பத்தை ஏற்றிடும் மாநுடர்கள்
புனிதத்தை காட்டிடும் போலியில்லா வார்த்தைகள்
புகலிடந்தான் இவர்களிடம் புதிதான அன்புகள்
வாடைக்காற்றுக்குள் வட்டமிடும் வண்ணாத்தி
பாட்டுக்குரலோடு பரவசமாய் பட்டுப்பூச்சி
தேனுண்ட களிப்பினிலே தெம்மாங்கு கீதம்
இசைக்குதங்கே மலருக்குள் இதமாகவண்டு...
மழலை மாறாத மாணிக்கப்பிஞ்சுகள்
மகிழ்வுகுறையாத மணிக்கணக்கான பேச்சுகள்
மனம் நிறைந்த அப்பொழுதுகள் மீண்டிடுமாவென்று
மதிநிறைந்த கேள்வியோடு விடைபெற்றேனன்று....
எப்படி???
உன்னை பிடிக்கும் -எப்படி
உண்மையினை சொல்வேன்
என்னை வெறுக்காதே -எப்படி
உனதுரிமையில் தலையிடுவேன்???
உண்மையினை சொல்வேன்
என்னை வெறுக்காதே -எப்படி
உனதுரிமையில் தலையிடுவேன்???
I LIKE THIS SONG
மழலைப் புன்னகை
எதையோ இழந்துவிட்டதைப்போல
சிலவேளைகளில்,
எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப்போல
இதயம் துடிக்க
மறுக்கின்ற போதெல்லாம்
மறு பிறப்பெடுப்பது உன்
மழலைப் புன்னகையில்தான்!!
சிலவேளைகளில்,
எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப்போல
இதயம் துடிக்க
மறுக்கின்ற போதெல்லாம்
மறு பிறப்பெடுப்பது உன்
மழலைப் புன்னகையில்தான்!!
Friday, October 4, 2013
Thursday, October 3, 2013
இசைபோதையின் கைகளில் உயிராபத்துக்கள்
இசைக்குள் ஒன்றிப்போகாத இதயங்கள் இங்கில்லை இசைக்கு மயங்காத செவிகளுமில்லை எனலாம். சினிமாப்பாடலை விரும்பாத இதயங்கள்கூட வேறு இசைக்குள் தொலைந்துவிடுவதை எவரும் மறுக்கமுடியாது. ஆனால் இச்சினிமா சார்ந்த அதுவும் துள்ளிசைப்பாடல்களால் வாகனப்பிரயாணங்களில் விபத்துக்கள் ஏற்பட அநேக சந்தர்ப்பங்கள் ஏதுவாக அமைகின்றது என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?
சில காலமாக மனதுக்குள் உழன்றுகொண்டிருந்த விடயமிது. குறிப்பாக தனியார்பேரூந்துகள், முச்சக்கரவண்டிகளில் அதிகமான ஒலியுடன் இயக்கிவிடப்படும் துள்ளிசைப்பாடல்களினால் இவ்வாறான அசம்பாவிதம் நடைபெற வழிவகுக்கின்றது. இந்த இசையில் தம்மை மறந்து லயித்துவிடுவது சாதாரணமான இயல்பான ஒரு விடயமே இது இவ்வாறு இருக்க,
முச்சக்கரவண்டி தனியார் பேரூந்துகளை எடுத்துக்கொண்டால், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி, பயணிப்பவர்களுக்கு இடைஞ்சலாக அல்லது அசெளகரியமாக இருக்கின்றதா என்ற எந்தவிதமான அக்கறையுமின்றி அதிக ஒலியுடன் இயக்கிவிடப்படும் பாடல்களால் ஓட்டுநர் ஏதோ தான் ஒரு கதாநாயகன் என்ற நிலைப்பாட்டோடு மிக வேகமாக வாகனத்தை செலுத்துவார். முன்னால் பின்னால் வரும் வாகனங்களின் சமிக்ஞை ஒலி கேட்பதும் குறைவு அத்துடன் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திக்கொண்டு சென்றுவிட வேண்டுமென்ற கதாநாயகத்தனத்தோடு பல உயிர்களை பணயம் வைத்து வாகனத்தை ஓட்டுவது பயணிகளுக்கு மரணபீதியை கிளப்பிக்கொண்டிருக்கும். வாகன ஓட்டுநர்கள் இளைஞர்களாக இருப்பின் இதுபற்றி சொல்லவே தேவையில்லை இளம்பெண்கள் வண்டியில் ஏறிவிட்டால் அவர்களை பக்கக்கண்ணாடிகளில் பார்ப்பதும் பாடலுக்கு ஏற்ப தமது அசைவுகளை வாகன ஓட்டலில் காட்டப்படுவதும் எரிச்சலை மட்டுமல்ல மரணபயத்தையே அதிகமாக உணர்த்திக்கொண்டிருக்கும்.
வாகன பிரயாணங்களில் அதிக ஒலியிடனான பாடல்கள் எத்தனையோ பிரயாணிகளுக்கு இடைஞ்சலாகவே காணப்படுகின்றது குறிப்பாக வயோதிபர்கள், நோயாளிகள், இன்னும் இதுபோன்ற இசைகளை விரும்பாதவர்கள் என பட்டியல் நீள்கின்றது. முக்கியமாக இறங்கவேண்டிய இடங்களில் இறங்குவதற்கு முடியாமல் (பாடலில் அதிக சத்தம் காரணமாக)பயணிக்கும் நடத்துநருக்குமிடையில் வாய்த்தர்க்கங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.
ஆக வாகனப்பிரயாணங்களின்போது மதுபாவனை போலவே அதிக இரைச்சலுடனான துள்ளிசைப்பாடல்களும் உயிருக்கும் எமது உடமைகளுக்கும் உத்தரவாதமில்லா ஒரு அபாயமாகவே காணப்படுகின்றது. முச்சக்கரவண்டி, பேரூந்துகள் மட்டுமன்றி எல்லா வாகனங்களிலும் இதுபோன்ற அசாதாரண இயல்புகளை மாற்றுவது அல்லது தடைசெய்வது சாலச்சிறந்தது என தோன்றுகின்றது.
சில காலமாக மனதுக்குள் உழன்றுகொண்டிருந்த விடயமிது. குறிப்பாக தனியார்பேரூந்துகள், முச்சக்கரவண்டிகளில் அதிகமான ஒலியுடன் இயக்கிவிடப்படும் துள்ளிசைப்பாடல்களினால் இவ்வாறான அசம்பாவிதம் நடைபெற வழிவகுக்கின்றது. இந்த இசையில் தம்மை மறந்து லயித்துவிடுவது சாதாரணமான இயல்பான ஒரு விடயமே இது இவ்வாறு இருக்க,
முச்சக்கரவண்டி தனியார் பேரூந்துகளை எடுத்துக்கொண்டால், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி, பயணிப்பவர்களுக்கு இடைஞ்சலாக அல்லது அசெளகரியமாக இருக்கின்றதா என்ற எந்தவிதமான அக்கறையுமின்றி அதிக ஒலியுடன் இயக்கிவிடப்படும் பாடல்களால் ஓட்டுநர் ஏதோ தான் ஒரு கதாநாயகன் என்ற நிலைப்பாட்டோடு மிக வேகமாக வாகனத்தை செலுத்துவார். முன்னால் பின்னால் வரும் வாகனங்களின் சமிக்ஞை ஒலி கேட்பதும் குறைவு அத்துடன் முன்னால் செல்லும் வாகனத்தை முந்திக்கொண்டு சென்றுவிட வேண்டுமென்ற கதாநாயகத்தனத்தோடு பல உயிர்களை பணயம் வைத்து வாகனத்தை ஓட்டுவது பயணிகளுக்கு மரணபீதியை கிளப்பிக்கொண்டிருக்கும். வாகன ஓட்டுநர்கள் இளைஞர்களாக இருப்பின் இதுபற்றி சொல்லவே தேவையில்லை இளம்பெண்கள் வண்டியில் ஏறிவிட்டால் அவர்களை பக்கக்கண்ணாடிகளில் பார்ப்பதும் பாடலுக்கு ஏற்ப தமது அசைவுகளை வாகன ஓட்டலில் காட்டப்படுவதும் எரிச்சலை மட்டுமல்ல மரணபயத்தையே அதிகமாக உணர்த்திக்கொண்டிருக்கும்.
வாகன பிரயாணங்களில் அதிக ஒலியிடனான பாடல்கள் எத்தனையோ பிரயாணிகளுக்கு இடைஞ்சலாகவே காணப்படுகின்றது குறிப்பாக வயோதிபர்கள், நோயாளிகள், இன்னும் இதுபோன்ற இசைகளை விரும்பாதவர்கள் என பட்டியல் நீள்கின்றது. முக்கியமாக இறங்கவேண்டிய இடங்களில் இறங்குவதற்கு முடியாமல் (பாடலில் அதிக சத்தம் காரணமாக)பயணிக்கும் நடத்துநருக்குமிடையில் வாய்த்தர்க்கங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.
ஆக வாகனப்பிரயாணங்களின்போது மதுபாவனை போலவே அதிக இரைச்சலுடனான துள்ளிசைப்பாடல்களும் உயிருக்கும் எமது உடமைகளுக்கும் உத்தரவாதமில்லா ஒரு அபாயமாகவே காணப்படுகின்றது. முச்சக்கரவண்டி, பேரூந்துகள் மட்டுமன்றி எல்லா வாகனங்களிலும் இதுபோன்ற அசாதாரண இயல்புகளை மாற்றுவது அல்லது தடைசெய்வது சாலச்சிறந்தது என தோன்றுகின்றது.
உன் நினைவுச்சாயங்கள்
இதயவெளியில் நிரம்பியிருக்கும்
வெறுமைகளில்
உன் நினைவுச்சாயங்கள் மட்டுமே
பூசப்பட்டுள்ளது
காய்ந்துகிடப்பினும்
மாய்ந்துபோகா அந்த
மனக்காயங்கள் -நான்
மாண்டுபோகும்வரை
மரணிப்பதில்லை!!
வெறுமைகளில்
உன் நினைவுச்சாயங்கள் மட்டுமே
பூசப்பட்டுள்ளது
காய்ந்துகிடப்பினும்
மாய்ந்துபோகா அந்த
மனக்காயங்கள் -நான்
மாண்டுபோகும்வரை
மரணிப்பதில்லை!!
லண்டன் தமிழ் வானொலியில்
31.07.2011 அன்று இலங்கை நேரப்படி நண்பகல் 12 மணிக்கும் மறுஒலிபரப்பு மாலை 5.30 மணிக்கும் லண்டன் தமிழ் வானொலியில் 'கீதாஞ்சலி' நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒலிபரப்பாகியது.
கவிதாயினி திருமதி மணிமேகலை கைலைவாசன்...
"வாழ்கின்ற காலம் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே...
இனம் ,மதம்,மொழி வேறுபாடற்ற ஓர் இனிய உலகத்தில் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்வது சிறப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்" என்ற மனிதத்துடன் கூடிய சிந்தனைகளோடு மித்திரன் வாயிலாக இணைந்துகொள்கின்றார், இலங்கையை பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி மணிமேகலை கைலைவாசன் அவர்கள். இலக்கியவாதியாக அறியப்பட்ட இவர் சிறந்த சமூக சிந்தனைகளையும் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிகமான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக நம்மத்தியில் பெறுமை பெறுகின்றார். அண்மையில் இலங்கைக்கு வந்த அவரை அணுகியபோது பகிர்ந்துகொண்ட விடயங்கள் வாசகர்களுக்காக.....
01.தங்களின் இலங்கைக்கான திடீர் விஜயம் குறித்து?
அன்னை மண்ணுக்கு வணக்கம் அன்புத் தமிழுக்கு வணக்கம்
என்னை நேர்காணல் செய்யும் தங்களுக்கும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். என்னுடைய கவிதைத்தொகுப்புக்களான தாயுமானவன்,சிந்தனைத் தொகுப்பு, இந்த நாள் இனிய நாள் வெளியீடு சம்பந்தமாகவும் சில இலக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கும் நோக்கமாகவும் சில சமூக நோக்கங்களுக்காகவும் எனது பிரயாணம் அமைந்தது.
02. வெளிநாட்டு வாழ்க்கை அநுபவங்கள் பற்றி?
காலை மாலை வேலை என்று இயந்திரம் போல இயங்குகின்ற வாழ்க்கை.
சுகபோகம் என்று சொல்வதற்கில்லை குளிர் நாடு என்பதனால் அதற்கான பாதுகாப்புகளுடன் இருக்கவேண்டிய சூழ்நிலை. போர்ச் சூழலில் இருந்து எம்மைப் பாதுகாத்த நாடு என்றபடியால் எனது தாழ்மையான வணக்கங்களும் நன்றியும் கனடாவுக்கு நான் எப்போதும் வழங்குவேன்.இங்கு எனது கணவர் மகாராஜா ,3 பிள்ளைகள் ,அம்மாவுடன் வசித்து வருகிறேன் இங்கே ஒரு தபால் திணைக்களத்தில் [clerk ] லிகிதராக இருக்கிறேன்.முதியோர் பராமரிப்பிலும் பட்டம் எடுத்துள்ளேன்.
03.நீங்கள் வாழ்ந்த காலத்து இலங்கைக்கும் தற்போதுள்ள இலங்கைக்குமிடையில் எவ்வாறான மாற்றங்களை அவதானித்தீர்கள்?
போர்ச்சூழலில் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
போக்குவரத்துகள் ,தொலைத்தொடர்புகள் ,கடிதப்போக்குவரத்துக்கள் ,கல்வி வசதிகள் சீரற்று இருந்தன. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது.
பாரிய மாற்றங்களைக் காண்கிறேன் போக்குவரத்துகள் இலகுவாக உள்ளன. வீதிப் பரிசோதனைகள் தளர்த்தப்பட்டுள்ளன பாடசாலைகளில் கல்விக்கான தரம் சிறப்பாக இருக்கிறது பாராட்டப்படக்கூடிய விடயம்
இலக்கிய வெளியீடுகளும் சிறப்பாக உள்ளன.
04.இலக்கியப்பிரவேசம் அதன் ஆர்வம் என்பன பற்றி கூறமுடியுமா?
சிறுவயதில் இருந்தே கலைகளில் ஆர்வம் இருந்தது.என்னுடைய பேரன் v .மார்க்கண்டு கலைமாமணிப் பட்டம் பெற்ற நாடக நடிகர்
v.v.வைரமுத்துவின் நெருங்கிய நண்பர்.என்னை 8 வயதிலேயே எழுத வைத்தவர் என் சிறிய தந்தையார் v .m .குகராஜா எழுத்தாளர்.
நான் பாடசாலை விழாக்களில் எழுதியிருக்கிறேன் கதைகள்,கட்டுரைகள் எழுதிப் பரிசுகள் பெற்றிருக்கிறேன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.தற்போது முகப்புத்தகத்தில் நிறையவே எழுதுகிறேன் நல்ல சிந்தனைகளையும் எழுதுகிறேன் தமிழ் மொழிமீது தீராக் காதல் எனக்கு எப்போதும் உண்டு அதன் இலக்கியப் பணிக்காக நான் என்னையே அர்ப்பணிப்பேன்.
05. ஈழத்து இலக்கியங்களின் மீதான ஆர்வம் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் மத்தியில் எவ்வாறு காணப்படுகின்றது?
தமிழன் எங்கு சென்றாலும் தன் கலாச்சாரம் ,பண்பாடு, மொழி என்பவற்றையும் காவியே செல்வான்.அதேபோல இலக்கிய ஆர்வமும் அவனுடனே நிறைந்திருக்கும்.கனடாவிலும் ஏராளமான கல்விக்கூடங்கள் உள்ளன கலைநிகழ்ச்சிகள்,பரீட்சைகள் ,பரிசுகள், விருதுகள் என்று ஏராளம். பல வானொலிகள் தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் இங்கே இயங்குகின்றன சேவை செய்கின்றன தமிழ் மாநாடுகளும் இங்கே இடம்பெற்றன. தமிழைத் தெளிவாகப் பேசுகின்ற குழந்தைகள் கனடாவில் அதிகம் என்பேன் நான்.ஆசிரியர்களின் பங்களிப்பும் புலம்பெயர் நாடுகளில் பாராட்டத் தக்கது.
06. கனடாவில் தங்களுடைய இலக்கிய பங்களிப்புக்கள், செயற்பாடுகள் குறித்து?
வீட்டிலேயே பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதில் இருந்து ,வானொலி நிகழ்சிகளில் ,தொலைக்காட்சி நிகழ்சிகளில் கலந்து கொள்வது வரை சொல்லலாம்.பல நூல் வெளியீடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.இன்று உலகம் முழுவதும் என்னைத் தெரிகிறது என்றால் அது முகப்புத்தகம் ஊடாகத் தான்.அதிகமான இலக்கியப் பங்களிப்பு முகப்புத்தகமூலம் தான் செய்கிறேன்.தொடர்ந்தும் எழுதுகிறேன்.
07.இலக்கியம் தவிர்ந்த உங்களுடைய ஏனைய ஆர்வங்கள் திட்டங்கள் பற்றி?
இயற்கையை அதிகம் ரசிப்பேன்.இசையை நிறையவே கேட்பேன்.
சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட காலமாகவே உள்ளது.தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விக்கும் அவர்கள் மீது அன்பு காட்டவும் எனக்கு கொள்ளை ஆசை.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களையும்பராமரிக்க 'தாயுமானவன் கருணை இல்லம்' என்ற பெயரில் அமைத்திட எண்ணியுள்ளேன். பொருளாதாரம் சரியான முறையில் அமைந்தால் நிச்சயம் என் எண்ணங்கள் நிறைவேறும்.எனது முதல் புத்தக வெளியீட்டில் வரும் நன்கொடைகள் அனைத்தையும் இவர்களுக்காகச் செலவிட எண்ணியுள்ளேன் இறைவன் ஆசியுடன் .
08.உங்களது ஊரிலும் இலக்கிய நண்பர்கள் மற்றும் ஏனையவர்களிடம் உங்களுடைய வருகையின்போதான வரவேற்பு பற்றிய அநுபவத்தினையும் பகிர்ந்துகொள்ளுங்கள்?
இம்முறை நான் ஊர் வந்த போது என் முகப்புத்தகஅன்பு நெஞ்சங்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.சிலரது கலைப்படைப்புகளை நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது.எனது தயாரிப்பில் தோட்டி எனும் குறும் படம் முகிலனின் படைப்பாக வெளிவந்தது.இலங்கையிலும் சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்.தட்டிக்கொடுத்தால் தமிழ்க் கலைகளும் வளர்ச்சிபெறும் என்ற தன்னம்பிக்கை வருகிறது. தொலைக்காட்சியில் இருந்து வானொலி, பத்திரிகை வரை எனக்கு நல்ல வரவேற்பைத் தந்தன.
09. பெண்களுக்கெதிரான வன்முறைகள், மேலைத்தேய நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்துவருகின்ற நாடுகளிலும் அதிகளவாக காணப்படுகின்றது அதற்கான காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்?
புரிதல் என்ற சொல் மறக்கப்பட்டமையே காரணம்.பெண் என்பவளும் ஓர் உயர்திணை உயிரினம் என்பதை மறந்து விடுகிறார்கள்.அவளுக்கும் சில தனிப்பட்ட ஆசைகள், கொள்கைகள் இருப்பதை மறுக்கிறார்கள்.
பெண்களும் தம் தன்னம்பிக்கையை இழந்து போவது அதிகமாக உள்ளது.வரும் தடைகளை உடைத்தெறியும் வல்லமை வேண்டும்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தைரியம் வேண்டும்.மேலை நாடுகளை விட வளர்முக நாடுகளில் தான் பெண்களுக்கான வன்முறைகள் அதிகமாக உள்ளன.பெண்கள் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் என்பது என் கருத்து.
10.பெண்ணியம் என்பதில் எவ்வாறான விடயங்கள் வளர்க்கப்பட அல்லது தீவிரப்படுத்தப்படவேண்டும் என நினைக்கிறீகள்?
ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் சளைத்தவள் அல்ல சகல திறமைகளும் உள்ளவள் சமையல் அறையில் இருந்து சட்டசபை வரை ஆள்கிறாள் பயம் என்பது தேவையற்றது அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பை விடுத்து நான் என்ன நினைக்கிறேன் என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும்.சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கையும் ,நல்ல சிந்தனைகளும் பெண்களையும் ,பெண்ணியத்தையும் உயர் நிலையில் வைக்கும் என்பது என் கருத்து.
11.வெளிநாட்டில் வசிக்கும் நீங்கள், தற்போது இலங்கையுடன் எவ்வாறான தொடர்புகளை கொண்டுள்ளீர்கள்? இவ்விஜயத்தின் பின்னர் எதிர்காலத்தில் எவ்வகையிலான தொடர்புகளை பேண வேண்டுமென நினைக்கிறீர்கள்?
இலங்கையில் எனது சகோதர சகோதரிகள் உள்ளனர் ஏராளமான நட்புள்ளங்கள் உள்ளனர் கலை இலக்கிய ஆர்வம் உள்ளவர்களும் உள்ளனர் முகப்புத்தக உறவுகளும் ஊடகங்களும் எனக்கு நல்ல உதவியும் பங்களிப்பும் தருகிறார்கள்.சில சமூக சேவைகளும் செய்ய எண்ணியுள்ளேன். இறைவன் ஆசி கொண்டு.சில நூல் வெளியீடுகளை யாழ்மண்ணில் தான் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.
12.இலங்கை தமிழர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
வாழ்கின்ற காலம் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே...
இனம் ,மதம்,மொழி வேறுபாடற்ற ஓர் இனிய உலகத்தில் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்வது சிறப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் அனாதைகள் என்ற சொல்லும் வேண்டாம் அகதி என்ற நிலைமையும் வேண்டாம் ஆன்மீகத்துடன் அன்பும் கலந்து வாழவும்
தமிழின் பெருமையும் புகழும் வளரவும் வாழ்த்துக்கள். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து நேர்காணல் நிகழ்த்திய மித்திரன் பத்திரிகைக்கும் எனது வாழ்த்துக்கள்.
Tuesday, October 1, 2013
நிறுத்திக்கொள்
பாவத்துக்கு
பட்டாடை கட்டிவிட்டு
பரிதாபங்களை
பத்திரப்படுத்திக்கொள்கின்றாய்
பிரதிபலன்களை இந்த
பரிதாபங்கள் தருவதில்லை
பலாபலன்களை இந்த
நீலிக்கண்ணீர்கள் தருவதில்லை
தீர்ப்பைமட்டும் நெஞ்சில்
தினந்தோறும் நிறுத்திக்கொள்
நாளைய வழக்கில் உனக்கு
தூக்குத்தண்டனையும் கிடைக்கப்பெறலாம்
பட்டாடை கட்டிவிட்டு
பரிதாபங்களை
பத்திரப்படுத்திக்கொள்கின்றாய்
பிரதிபலன்களை இந்த
பரிதாபங்கள் தருவதில்லை
பலாபலன்களை இந்த
நீலிக்கண்ணீர்கள் தருவதில்லை
தீர்ப்பைமட்டும் நெஞ்சில்
தினந்தோறும் நிறுத்திக்கொள்
நாளைய வழக்கில் உனக்கு
தூக்குத்தண்டனையும் கிடைக்கப்பெறலாம்
Monday, September 30, 2013
அம்மா எங்கள் அம்மா
அம்மா எங்கள் அம்மா
அன்பான அம்மா
ஆசையோடு அணைத்து
அள்ளிக்கொள்ளும் அம்மா
காலை மாலை உணவை
கண்டிப்பாக தருவாள்
சோலைபோல என்னை
அலங்கரித்துச் செல்வாள்
பள்ளி செல்லும் என்னை
பத்திரமாக அனுப்பி
வாசல் வந்து நின்று
வரவேற்கும் அம்மா
எந்தன் கண்ணில் தூசு
கண்டாலே துடிப்பாள்
சொந்தம் எந்தன் சொந்தமென்று
சொல்லி நிதம் மகிழ்வாள்
கெட்டப்பழக்கம் என்னில்
கண்டாலே அதட்டி
நல்ல பண்பை ஊட்டி
நல்வழிப்படுத்தும் அம்மா
அம்மா சொல்லைக் கேட்பேன்
அறிவை நாளும் வளர்ப்பேன்
உயர்ந்த நிலைக்கு செல்வேன்
உயிராய் அவளை காப்பேன்
அன்பான அம்மா
ஆசையோடு அணைத்து
அள்ளிக்கொள்ளும் அம்மா
காலை மாலை உணவை
கண்டிப்பாக தருவாள்
சோலைபோல என்னை
அலங்கரித்துச் செல்வாள்
பள்ளி செல்லும் என்னை
பத்திரமாக அனுப்பி
வாசல் வந்து நின்று
வரவேற்கும் அம்மா
எந்தன் கண்ணில் தூசு
கண்டாலே துடிப்பாள்
சொந்தம் எந்தன் சொந்தமென்று
சொல்லி நிதம் மகிழ்வாள்
கெட்டப்பழக்கம் என்னில்
கண்டாலே அதட்டி
நல்ல பண்பை ஊட்டி
நல்வழிப்படுத்தும் அம்மா
அம்மா சொல்லைக் கேட்பேன்
அறிவை நாளும் வளர்ப்பேன்
உயர்ந்த நிலைக்கு செல்வேன்
உயிராய் அவளை காப்பேன்
'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' நூலுக்கான கருத்துரை
வாசிப்பின் அநுபவங்கள் ஒவ்வொருவருக்கிடையிலும் வேறு வேறு
அதிர்வுகளை தந்துவிடுகின்றது.சிலருக்கு நுனிப்புல் மேய்வதும் சிலருக்கு ஆழமாக வாசித்து உள்வாங்கிக்கொள்வதும் சிலருக்கு தமது வாசிப்பநுபவத்தை வரிகளாக்குவதும் விபரிப்பதுமென்று இன்னும் பலவாறு வேறுபடலாம். வாசிப்பின்பால் கொண்ட ஈர்ப்பினாலும் எழுத்துக்களின் மீதான ஈடுபாடுகளினாலும் தாம் சுவைத்த நூல்கள் பற்றிய ரசனைக்குறிப்புக்களோடு நல்ல வாசகியாக அறிமுகமான ரிம்ஸா முகமட் அவர்கள் அக்குறிப்புக்களை தொகுத்து நூலுருவாக்கி நம் மத்தியில் ஒரு விமர்சகராக அறிமுகமாகின்றார்.
2004ம் ஆண்டு 'நிர்மூலம்' என்ற கவிதையோடு அறிமுகமான கவிதாயினி ரிம்ஸா அவர்கள் இலங்கையின் சகல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வலைதளங்களிலும் தனது படைப்புக்களை வெளியிட்டு வருகின்றார். கவிதை சிறுகதைஇலக்கியம், விமர்சனம் எனும் இலக்கிய தளங்களில் கால்பதித்துள்ள இவர் கணக்கீட்டுத்துறையில் பல பட்டங்களைப்பெற்ற பன்முகத்திறமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்து இலக்கிய பரப்பில் தனியொரு முத்திரையோடு வலம்வரும், வளர்ந்துவரும் இளம்படைப்பாளியான இவரின் நூலுக்கு அணிந்துரையினை திறனாய்வாளர் திரு கே.எஸ். சிவக்குமாரன் அவர்கள் எழுதியிருப்பது சிறப்பாகும் நூலாசிரியரின் முழுவிபரங்களோடும் பின்னட்டைக்குறிப்பை கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்களும் எளிமையான அழகுடனும் நயத்துடனும் முன்னட்டையினை அலங்கரித்திருக்கின்றார் கவிதாயினி ரிஸ்னா அவர்கள்.
கவிதை சிறுகதை நூல்களை மட்டுமன்றி சஞ்சிகை,நினைவுமலர், பாடல்தொகுப்பு, குறுங்காவியத்தொகுதி என ஏனைய நூல்களினையும் விமர்சனரீதியாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது. ஆழமான வாசிப்பினையும் விரிவான ரசனையுணர்வும் பரந்த தேடலும்கொண்ட நூலாசிரியர் இலங்கையின் சகல பகுதிகளிலுமுள்ள எழுத்தாளர்களின் நூல்களை படித்து விமர்சித்திருப்பது நூலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளதோடு வாசகர்களாகிய எமக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தினையும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பினையும் ஆர்வத்தைனையும் பெற்றுத்தந்துள்ளது. ஆவணப்படுத்தப்படவேண்டிய இந்நூலானது ஆய்வுகளுக்கும் ஆர்வமுள்ள வாசகர்களின் நூல் தெரிவுகளுக்கும் சிறந்த வழிகோலாகவும் காணப்படுகின்றது ஆனாலும் ஒவ்வொரு நூல்விமர்சனத்தின்போதும் அந்நூல் வெளிவந்த காலப்பகுதியினை குறிப்பிட்டிருப்பின் பிற்காலத்தில் மேற்குறிப்பிட்டவர்களுக்கு உபயோகமாயிருந்திருக்கும் என்பது முக்கியமானதாகும்.
விமர்சனம்/ திறனாய்வு போன்ற எண்ணக்கருக்களுக்கு வித்திட்டிருக்கும் இவ் ரசனைக்குறிப்புக்களோடு மேலும் பல புதிய புதுமையான எழுத்துக்களோடு எம்மை சந்திக்கும் ஆற்றலுள்ள நூலாசிரியர் ரிம்ஸா முகமட் அவர்களை வாழ்த்துவதோடு இலங்கையின் எழுத்தாளர்கள் பற்றிய தேவையுடையோர் ஐயமற இந்நூலினை பெற்று பயன்பெறலாம் என்ற உறுதிமொழியுடன் விடைபெறுகின்றேன்.
நூல்: 'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' விமர்சனநூல்
ஆசிரியர்: ரிம்ஸா முகமட்
வெளியீடு: எஸ். கொடகே நிறுவனம்
வெளியிட்ட தினம்:07.07.2013
விலை:500/=
Friday, September 27, 2013
இனியெதுவும் வேண்டாம்
வந்துவந்து போகின்றாய்
வஞ்சியிவள் அறியாமல்
நொந்தழிந்து போய்விடுகின்றேன்
நேசமில்லா அந்நிமிடங்களையெண்ணி
காதலில் தொடங்கியது
கானலாய் முடிந்தது
மோதலில் முடிந்தது
மீண்டுமாய் தொடருமா???
இடைவெளிகள் நமக்குள்
இம்மியளவும் இல்லையென்றே
இதயத்தை தேற்றியவேளை
இன்னொரு உறவுக்குள்
இணைந்துபோன உன்னை
இதயத்தால் வாழ்த்துவதன்றி
வழிவேறு அறியாமல்
வாய்விழுங்கிய வார்த்தைகளை
கண்ணீரால் சரிசெய்துகொள்கின்றேன்...
புல்லரித்துப்போகும் நம்
புன்னகைசுமந்த நாட்களின்று
செல்லரித்துப்போன கவிதையானது
செல்லாக்காசானது நேசம்மட்டுமல்ல
உண்மைகளுந்தான்
இன்னொரு ஜென்மம் வேண்டாம்
இனியொரு பிறவியும் வேண்டாம்
பெண்ணாய் பிறக்கும் அவலம் வேண்டாம்
பொருளில்லா வாழ்வெனக்கு வேண்டாம்
பகட்டான நேசங்கள் வேண்டாம்
பாதியில் முடியும் உறவுகளும் வேண்டாம்
பெறுமை தேடும் வேஷங்கள் வேண்டாம்
பொறுப்பில்லாத பாசங்களும் வேண்டாம்
போலியான உலகிலே
பெறுமதியென்று எதுவும் வேண்டாம்
இனியெதுவும் வேண்டாம்
இன்னொரு ஜென்மமும் வேண்டாம்
வஞ்சியிவள் அறியாமல்
நொந்தழிந்து போய்விடுகின்றேன்
நேசமில்லா அந்நிமிடங்களையெண்ணி
காதலில் தொடங்கியது
கானலாய் முடிந்தது
மோதலில் முடிந்தது
மீண்டுமாய் தொடருமா???
இடைவெளிகள் நமக்குள்
இம்மியளவும் இல்லையென்றே
இதயத்தை தேற்றியவேளை
இன்னொரு உறவுக்குள்
இணைந்துபோன உன்னை
இதயத்தால் வாழ்த்துவதன்றி
வழிவேறு அறியாமல்
வாய்விழுங்கிய வார்த்தைகளை
கண்ணீரால் சரிசெய்துகொள்கின்றேன்...
புல்லரித்துப்போகும் நம்
புன்னகைசுமந்த நாட்களின்று
செல்லரித்துப்போன கவிதையானது
செல்லாக்காசானது நேசம்மட்டுமல்ல
உண்மைகளுந்தான்
இன்னொரு ஜென்மம் வேண்டாம்
இனியொரு பிறவியும் வேண்டாம்
பெண்ணாய் பிறக்கும் அவலம் வேண்டாம்
பொருளில்லா வாழ்வெனக்கு வேண்டாம்
பகட்டான நேசங்கள் வேண்டாம்
பாதியில் முடியும் உறவுகளும் வேண்டாம்
பெறுமை தேடும் வேஷங்கள் வேண்டாம்
பொறுப்பில்லாத பாசங்களும் வேண்டாம்
போலியான உலகிலே
பெறுமதியென்று எதுவும் வேண்டாம்
இனியெதுவும் வேண்டாம்
இன்னொரு ஜென்மமும் வேண்டாம்
கணனிக்குமுன் சிறுவர்கள்!!
மாலை முழுதும் விளையாட்டு
மைதானம் வெறிச்சோடிக்கிடக்கின்றது
கணனிக்குமுன் சிறுவர்கள்
மைதானம் வெறிச்சோடிக்கிடக்கின்றது
கணனிக்குமுன் சிறுவர்கள்
Saturday, September 21, 2013
கண்ணாம்பூச்சி
கண்ணாம்பூச்சியென்றுதான் இதுவரை
கண்திறவாதிருந்தேன்
கண்விழித்தபோதுதான் புரிந்தது நீ
காணாமல் போயிருந்ததை...
கண்திறவாதிருந்தேன்
கண்விழித்தபோதுதான் புரிந்தது நீ
காணாமல் போயிருந்ததை...
Friday, September 20, 2013
காற்றுவெளி இணைய இதழில்
http://issuu.com/kaatruveli/docs/______________________________?e=1847692/4818419#search
வருடங்கள் இரண்டைக்கடந்து
வாழ்ந்துவிட்டேனுன்னோடு நான்
கற்பிழந்தவள்தான்
இப்போது
இன்னெருவனோடு என்னை
வாழச்சொன்னால்???
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
சாஸ்திர சம்பிரதாயத்தில்
இணைக்கப்படாவிட்டாலும்
உன்னோடு வாழ்ந்துவிட்டேன் நான்
கற்பிழந்தவள் தான்
இதயங்கள் பரிமாரப்பட்டு
இன்பங்களையும் துன்பங்களோடு
இரண்டற பகிர்ந்துகொண்ட நம்
இனிமையான நாட்களில்
உன்னோடுதான் வாழ்ந்திருந்தேன் நான்
கற்பிழந்தவள்தான்
இரவுதோறுமுன்
கனவுகளைத்தழுவியே
இதயத்திலெப்போதுமுன்
நினைவுகளில் திளைத்தே
வாழ்ந்திருக்கும் நான்
கற்பிழந்தவள்தான்
தம்பத்தியத்தில் இணைவது மட்டுமல்ல
இதயத்தால் இணைந்துவிடுவதும்
உயிருள்ள திருமணந்தான்
அப்படியென்றால் நான்
கற்பிழந்தவள்தான்
உன் விரல்கள் பிடித்த
என் பயணங்கள்
நீ மீதம்வைத்து
நான் பருகிடும் தேநீர்
ஒற்றைப்பொதியில்
இருகைகள் இணைந்துண்ணிய
பொழுதுகள் எல்லாமே
தாம்பத்தியமாதலால் நான்
கற்பிழந்தவள்தான்
காதல்
அப்படியொன்றும் அற்பமில்லை
மனதால் இணைவதே
மாறாத மாங்கல்யந்தான்
நினைத்து நினைத்து மறப்பதற்கு
உள்ளமொன்றும் உம்வீட்டு
ஊத்தைக்கூடையில்லை
உயிருக்குள் எப்போதும்
உறுத்திக்கொண்டிருக்கு மூசி...
உறவால் தைத்துவிட்டதை
பிரித்தெடுப்பதும்
பிரிந்திடாமலிருப்பதும்
உம் கைகளில்தான் அதனால்
நான் கற்பிழந்தவள்தான்
என்னை வற்புறுத்தாதீர்
மறுமணம் செய்யச்சொல்லி
என்னை வதைக்காதீர் காதலை
மறக்கச்சொல்லி நான்
கற்பிழந்தவள்!!
வருடங்கள் இரண்டைக்கடந்து
வாழ்ந்துவிட்டேனுன்னோடு நான்
கற்பிழந்தவள்தான்
இப்போது
இன்னெருவனோடு என்னை
வாழச்சொன்னால்???
அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
சாஸ்திர சம்பிரதாயத்தில்
இணைக்கப்படாவிட்டாலும்
உன்னோடு வாழ்ந்துவிட்டேன் நான்
கற்பிழந்தவள் தான்
இதயங்கள் பரிமாரப்பட்டு
இன்பங்களையும் துன்பங்களோடு
இரண்டற பகிர்ந்துகொண்ட நம்
இனிமையான நாட்களில்
உன்னோடுதான் வாழ்ந்திருந்தேன் நான்
கற்பிழந்தவள்தான்
இரவுதோறுமுன்
கனவுகளைத்தழுவியே
இதயத்திலெப்போதுமுன்
நினைவுகளில் திளைத்தே
வாழ்ந்திருக்கும் நான்
கற்பிழந்தவள்தான்
தம்பத்தியத்தில் இணைவது மட்டுமல்ல
இதயத்தால் இணைந்துவிடுவதும்
உயிருள்ள திருமணந்தான்
அப்படியென்றால் நான்
கற்பிழந்தவள்தான்
உன் விரல்கள் பிடித்த
என் பயணங்கள்
நீ மீதம்வைத்து
நான் பருகிடும் தேநீர்
ஒற்றைப்பொதியில்
இருகைகள் இணைந்துண்ணிய
பொழுதுகள் எல்லாமே
தாம்பத்தியமாதலால் நான்
கற்பிழந்தவள்தான்
காதல்
அப்படியொன்றும் அற்பமில்லை
மனதால் இணைவதே
மாறாத மாங்கல்யந்தான்
நினைத்து நினைத்து மறப்பதற்கு
உள்ளமொன்றும் உம்வீட்டு
ஊத்தைக்கூடையில்லை
உயிருக்குள் எப்போதும்
உறுத்திக்கொண்டிருக்கு மூசி...
உறவால் தைத்துவிட்டதை
பிரித்தெடுப்பதும்
பிரிந்திடாமலிருப்பதும்
உம் கைகளில்தான் அதனால்
நான் கற்பிழந்தவள்தான்
என்னை வற்புறுத்தாதீர்
மறுமணம் செய்யச்சொல்லி
என்னை வதைக்காதீர் காதலை
மறக்கச்சொல்லி நான்
கற்பிழந்தவள்!!
Wednesday, September 18, 2013
Tuesday, September 17, 2013
தனிமை
சந்தோஷந் தந்தாய் தனிமை
சங்கடங்களையும் தந்தாய்
பிரியத்தை விதைத்தாய் நெஞ்சில்
பிரிவின் வேதனையையும் விதிர்த்தாய்
அன்பினால் கூடினாய் அடிக்கடி
அமைதியின்மையையும் கூட்டினாய்
புன்னகையை மலர்வித்தாய் சட்டென்று
புண்களையும் மலர்வளையமாக்கினாய் இன்றோ
தனிமை சாம்ராஜ்யத்தில்
தலைமைப்பதவியை எனக்களித்து
தள்ளிநின்று ரசிக்கின்றாய்!!
சங்கடங்களையும் தந்தாய்
பிரியத்தை விதைத்தாய் நெஞ்சில்
பிரிவின் வேதனையையும் விதிர்த்தாய்
அன்பினால் கூடினாய் அடிக்கடி
அமைதியின்மையையும் கூட்டினாய்
புன்னகையை மலர்வித்தாய் சட்டென்று
புண்களையும் மலர்வளையமாக்கினாய் இன்றோ
தனிமை சாம்ராஜ்யத்தில்
தலைமைப்பதவியை எனக்களித்து
தள்ளிநின்று ரசிக்கின்றாய்!!
Sunday, September 15, 2013
இடிதந்தாய்??
என்னை வடிவமைத்தாய்
என்னில் வடிவமைத்தாய்
எல்லாவற்றையும்
கண்ணீர் வடிப்பதற்காகவென்று
சொல்லாமலேன் இடிதந்தாய்??
என்னில் வடிவமைத்தாய்
எல்லாவற்றையும்
கண்ணீர் வடிப்பதற்காகவென்று
சொல்லாமலேன் இடிதந்தாய்??
நாளை என் மரணமென்றால்??
தீயென்பதால் நா சுடுவதில்லை
நாளையென் மரணத்தை இன்றே
உணர்வதில் தவறுமில்லை
இந்நொடி இல்லையென்றாலும்
காலந்தாழ்த்திய ஓர் நொடியில்
இது நிகழ்ந்தேயாக வேண்டும்
கண்மூடி அத்தருணத்தில் என்
நினைவுகளை சங்கமிக்கின்றேன்
அலறல்களும் அழுகுரல்களுமாய்
எனதில்லம் ஓலமிடும்
அற்பாயுளில் போய்விட்டதாய்
ஆதங்கப்படும் அனைவரிலும் என
தன்னையின் கதறல்களென்
நெஞ்சத்தைப் பிழிகின்ற்து
இத்தனை வருடங்களில்
எனைதாங்கிய தந்தை
வேதனையை விழுங்கமுடியாதவராய்
விம்மியழும் காட்சி ஐயகோ...
சங்கறுந்துவிழு மளவுக்கென்
சகோதரர்களின் வீறிட்ட அழுகை
அன்பென்ற ஆச்சரியத்தை
ஆழமாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது
ஊரிலுள்ளவர் குழுமியிருக்க
உறவினர்கள் கலங்கிநிற்க
எனை பிடிக்காத சிலர்கூட
கன்னத்தில் கரம்வைத்ததும்
இப்போதுதான்
'பாவம் நல்ல பிள்ளை'
இறுதியில் எல்லாருக்குமான
மரண சான்றிதழ் எனக்கும்
கிடைக்கலாம்...
பழகிய உறவுகள்
நெருங்கிய சொந்தங்கள்
அறிந்த பந்தங்கள்
தெரிந்த நட்புக்களென
எல்லாரும் கலந்துகொள்ளலாம்
இறுதுயூர்வலத்தில்
வாய்வழிச் செய்தியறிந்து
அநுதாபங்கள் சில
வந்துவிழலாம்
ஆச்சரிய செய்தியாய் முகநூலில்
நட்புக்களின் கண்ணீர்துளிகள்
கவிதை வடிக்கலாம்
இதயம் நெகிழும் இறுதியூர்வலத்தில்
இளகாத நெஞ்சம் ஒன்றில்லாதிருக்கலாம் ஆனால்
எனதிதயமறியா ஓர்நெஞ்சம் மட்டும்
இச்செய்தியறியாமலிருக்கலாம்
கதறல்களோடு கல்லறையாக்கப்பட்ட
எனதுடலம்
மலர் வளையங்களினால்
அலங்கரிக்கப்படும்
சாஸ்திர சம்பிரதாயங்கள்
சமய வழிபாடுகளுடன் என்
பூலோக வாழ்வின் பூரணமும்
ஆறடி நிலத்துக்குள் நிரப்பப்படும்
ஆறாத சோகங்களுடன்
நிறைவேறிய என்
வாழ்வியல் யாத்திரையுள்
முடிந்துபோனது எல்லாமே
நினைவுகளோடூ திரும்பிப்பாராமல்
திரும்பி போகுமுறவுகள்
நாற்பதாவது நாளை நினைவுகொள்வார்கள்
நிஜங்களுக்குள் தொலைந்துபோகும்
நிமிடங்கள் நிஜமாயென்
ஞாபக சுவடுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்
பூ
பூமரத்துப் பூக்களும்
பூத்திருந்த பூ(பா)வை பார்த்து -வேரிலே
பூவொன்று பூத்திருக்கிறதென்று
கிளை பிரிந்தது உதிர்கின்றதே!!
Saturday, September 14, 2013
பொய்கள் களைதல்
போரும் பொறுப்பும் எமக்காம் -நல்
பேறு பெறுதல் வழக்காம்
தூறும் பொய்கள் களைதல்
தூவும் இனிமைக் கிலகாம்!!
Friday, September 13, 2013
மழலைப் புன்னகை
எதையோ இழந்துவிட்டதைப்போல
சிலவேளைகளில்,
எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப்போல
இதயம் துடிக்க
மறுக்கின்ற போதெல்லாம்
மறு பிறப்பெடுப்பது உன்
மழலைப் புன்னகையில்தான்!!
சிலவேளைகளில்,
எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப்போல
இதயம் துடிக்க
மறுக்கின்ற போதெல்லாம்
மறு பிறப்பெடுப்பது உன்
மழலைப் புன்னகையில்தான்!!
இறவாமலிருக்கின்றேன்!!
நீ அருகில் இருக்கும்போது
இயங்காமலிருக்கின்றேன்
நீயென் உயிரிலிருப்பதால்தான் -இன்னும்
இறவாமலிருக்கின்றேன்!!
இயங்காமலிருக்கின்றேன்
நீயென் உயிரிலிருப்பதால்தான் -இன்னும்
இறவாமலிருக்கின்றேன்!!
Thursday, September 5, 2013
இவள்தான் வேண்டுமென்று!!
இல்லத்தைப்பார்க்க தெரிந்த அவர்களுக்கு
உள்ளத்தைப்பார்க்க முடிந்திருந்தால்
ஒருவேளை அவளை பிடித்திருக்கும்
இவள்தான் வேண்டுமென்று!!
உள்ளத்தைப்பார்க்க முடிந்திருந்தால்
ஒருவேளை அவளை பிடித்திருக்கும்
இவள்தான் வேண்டுமென்று!!
Wednesday, September 4, 2013
வாழபுறப்பட்டுவிட்டேன்...
(கல்முனை தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் 2013 ஜூலை மாதம் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் சான்றிதழ் பெற்ற கவிதை)
பெண்மையின் மேன்மையெல்லாம்
தென்றல் கலைத்த மேகம்போல
அநாயசமாய் அழிந்துபோகின்றது
தீக்கொண்டு சாம்பல்கண்டிடும்
தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது
எத்தனை காலத்துக்குத்தான்
புத்தகத்தில் மூடிய மயிலிறகாய்
பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது...
முப்பத்தைந்தை தாண்டிய -என்
முதிர்க்கன்னித்திரை கிழித்து
முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால்
என்னைக் கிழித்த உம்
வார்த்தைக் கணைகளுக்கு
விஷந்தடவி எய்துகொண்டிருந்ததேன்...
இத்தனை வருட மிருந்தவள் -இப்போ
இஸ்டத்துக்கா செல்ல வேண்டும்
சாதிவிட்டு சாதிசென்றதற்கு
சாக்கடையில் வீழ்ந்து செத்திருக்கலாமென்ற
உங்கள் அற்பங்கள் என்னையொன்றும்
அழித்துவிடுவதில்லை...
மதம்மீறியது பிழையென்றால் -நீங்கள்
மருமகளுக்கு பதிலாக
மனையுடன் சேர்ந்த லட்சங்களை கேட்டதேன்??
சாதிக்கலந்தது சாபமென்றால்
சீதனத்தை மட்டுமே நீவீர்
தேடியதும் தீண்டாமைதான்
காதல் பாவமென்றுதானே
இத்தனை வருட காத்திருப்பு
அதற்கு உங்களால்
முதிர்க்கன்னியென்ற
முக்காட்டை மட்டுமல்லவா போர்த்தி
மூழ்கடிக்க முடிந்திருந்தது
வேர்கள் வெளிக்கிளம்பிய பின்னுங்கள்
வேலிகளுக்கிங்கு வேலையில்லை
மனம் பொறுக்குமளவுக்குங்கள்
சுடுசொற்கள் இருந்ததில்லையே அதனால்தான்
மனச்சிறைக்குள் மாண்டுபோயிருந்த
மாங்கல்யத்தை மருந்தாயிட்டுக்கொண்டேன்
வாலிபவேட்கையில் நானின்று
வரம்புமீறி காதல்செய்யவில்லை
காலத்திடம் சிக்கிக்கிடந்த சில
முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்
அவ்வளவுதான் ஆனந்தப்பட்டுக்கொள்ளுங்கள்
காலம்முழுக்க கன்னியாகவே
வாழவிட்டிருப்பீர்களா
மூச்சுக்கு மூச்சு
முடிந்திடா கேள்விகளால் என்னை
மூர்க்கத்தனமாயல்லவா கொன்றிருப்பீர்கள்
இரண்டில் ஒன்று
எடுக்கும் நேரத்தில்தான்
இதயமறிந்த இவன்வந்தான்
வாழ்வோடு போராடி சாவதிலும்
சாவோடு போராடு வாழ்வதென்ற முடிவோடே
சாதியினை கடந்து
மதத்தினை மறந்து
மனிதத்தோடு மட்டுமே
வாழபுறப்பட்டுவிட்டேன்...
எப்போது கல்யாணம்
ஏனின்னும் கல்யாணம்
சரிவரவில்லை என்ற
ஏளனங்களை தவிர்க்க
உங்களிடமிருந்து உத்தரவாதம்
வழங்கப்பட்டிருந்தால்
என்னாலும் வாழ்ந்திருக்கமுடியும்
காலமெல்லாம்
முதிர்க்கன்னியாகவல்ல
முழுக்கன்னியாக....
வேண்டும் வேண்டும்!!
அதிகம் படித்தவனும் வேண்டாம்
அரைப்படித்தவனும் வேண்டாம்
அகம்புரிந்திடுமறிவோடு
அன்பு சொரிந்திடுமொருவன்
அமைந்திட்டாலே போதும்
அளவுக்கதிகமா யுழித்து
அலுவலகமே கதியென்று
அலட்டுமொருவன் வேண்டாம்
அளவோடு எல்லாமெதிலும்
அநுசரிப்பவனே போதும்
பணத்துக்கு பின்னால்
பாகயுருகு மொருவன் வேண்டாம்
பண்பில்லாப்பார் வையுடன்
பாவையர் பின்னலையும்
பங்காளனும் வேண்டாம்
பத்தோடு பத்துபேரை பார்ப்பினும்
பாதை தவறாதவன் வேண்டும்
காதலியென்ற கனவுக்கும்
மனைவியென்ற மகுடத்துக்கும்
என்னுடன் மட்டும்வேலியிட்ட
அவன்மட்டும் வேண்டும்
வேறு எல்லா உறவுகளையும்
எல்லாரோடும் பகிர்ந்துகொள்ளும்
பரந்த மனமுள்ளவன்
வேண்டும் வேண்டும்
உன்னை மட்டுமே!!
புதிய இடம்
புதிய மனிதர்கள்
புதிய சூழலென்று
மாற்றங்கள் செய்துதந்தபோதும்
இதயம்
புதிது புதிதாய்
நினைத்துக்கொண்டிருக்கின்றது
மறந்துவிடச்சொன்ன
உன்னை மட்டுமே!!
புதிய மனிதர்கள்
புதிய சூழலென்று
மாற்றங்கள் செய்துதந்தபோதும்
இதயம்
புதிது புதிதாய்
நினைத்துக்கொண்டிருக்கின்றது
மறந்துவிடச்சொன்ன
உன்னை மட்டுமே!!
ஏழை
பெரிய மனிதர்களின்
ஆடைகள் எப்போதும்வெள்ளையாகத்தான் இருக்கிறது
ஏழைகளின்
உள்ளத்தைப்போல...!!!!!!!!1!!22!...........!!
Tuesday, September 3, 2013
வாழ்க்கையை
நீ விளையாட்டுப்பிள்ளைதான்
உன் குறும்புகளின்
ரசிகையும் நானேதான்
சற்றேனும்
எதிர்பார்க்கவில்லை -என்
வாழ்க்கையை
விளையாட்டுப்பொருளாய்
எடுத்துக்கொள்வாயென்று....
உன் குறும்புகளின்
ரசிகையும் நானேதான்
சற்றேனும்
எதிர்பார்க்கவில்லை -என்
வாழ்க்கையை
விளையாட்டுப்பொருளாய்
எடுத்துக்கொள்வாயென்று....
Monday, September 2, 2013
Sunday, September 1, 2013
Subscribe to:
Posts (Atom)



.jpg)
.jpg)

.jpg)




.jpg)






.jpg)
.jpg)



.jpg)
.jpg)








.jpg)


