Sunday, October 26, 2014

வாழத்தான் வேண்டும் (26.10.2014 தினகரன் வாரமஞ்சரி )

வாழ்க்கை முடியுமட்டும்
வாழத்தான் வேண்டும்

தாழ்வு வந்திடினும்
எழத்தான் வேண்டும்

ஊமை நாவுகள்
இசையை கேட்கக்கூடாதா

ஏழ்மையுருக்குவதால் எல்லாம்
இழந்திடல் வேண்டுமோ
உள்ளவனுக்கு ஒன்றென்றால்
இல்லாதவனுக்கு ஆயிரமாமே
இறைவனிருக்கும் இந்த‌
இல்லாதவனிடத்தில்
ஆயிரங்கள் உருவாவதிலொன்றும்
அதிசயமே இல்லை...

வாழத்தான் வேண்டும் ஏதோவோர்
எளிய வழியில் -நல்ல‌
தெளிந்த வழியில் -தீமை
அறுந்த வழியில் -மனம்
மகிழும் வழியில் -பலர்
நெகிழும் வழியில் -குணம்
நிலைக்கும் வழியில் -நாம்
வாழத்தான் வேண்டும்...

ஏழ்மை தழைத்தோங்கி   நிற்பினும்
வாழத்தான் வேண்டும்!!

நிம்மதி

நிம்மதி,
கிடைக்கும் வரமல்ல
பெற்றுக்கொள்ளும் புத்திசாலித்தனம்....

Friday, October 24, 2014

தோள்கொடுத்த வீழ்ச்சியில்தான்... (02.11.2014 தினக்குரலில்)

அன்றொருநாள் நிலாவை
அழகென்றே மகிழ்ந்தேன்
என்னவென்று அறியேன்
எல்லாவற்றிலும் குறைதான்...

கோலமயிலும் கொண்டைச்சேவலும்
கோவில்மாடும் ரசனையென்றுதான்
காலமெல்லாம் நினைத்திருத்தேன்
காலமனைத்தையும் மாற்றியதேனோ...

பூக்கும் பூவும்
புன்னகைக்கும் முயலும்
தாக்கிடும் என்பதனை
தாமதித்தே அறிந்துகொண்டேன்...

சிறகுவிரித்து பறந்தாலும்
மனதுவிரிக்கா கிளிபோல‌
சிறையிருந்த நாளெல்லாம்
சிந்தையிலே நிறைந்ததுவே...

காலம் கவலையினையீன எனை
கல்வியொன்றே கரைசேர்க்க‌
மாய்ந்த காலமெல்லாம்
மனதைவிட்டு அகன்றதுவே...

நிகழ்காலமென்னில் நிஜங்களை
நிறைத்துவிட்டுச் செல்ல‌
இகழ்கால நினைவெல்லாம்
இல்லாமல்தான் போனது....

தோல்வியெல்லாம் படிகளென்று
தோன்றியது இன்றுதானே
தோள்கொடுத்த வீழ்ச்சியில்தான்
தோன்றினேன் நான் சுடராக‌

Sunday, October 5, 2014

மறக்கத்தான் நினைப்பேனோ


என்னை உனக்கு மறந்துபோயிருக்கலாம்
எதுவும் நினைவில் இல்லாமலிருக்கலாம்
விண்ணை நோக்கி உயர்ந்த நிலையில் +என்னிடம்
விடுதலையை நீயும் உணர்ந்திருக்கலாம்

காலங்கள் மட்டும்தான் கடந்திருக்கின்றது -என்னில்
காட்சிக ளெதுவும் கலைந்திடவில்லை
பாலமாய் நமைவளர்த்த கவிதையும் -இன்று
மாயமாய் எங்கேயோ மறைந்துவிட்டது...

அன்றொருநாளின் ஆனந்தப்பொழுதுகளும்
அழுகையோடு தொடர்ந்த இன்பமுடிவுகளும்
கன்னத்தில் வழிந்த நீரும் இறுதியில்
கண்ணீராய்த்தான் முடிந்துபோனது...

விதியை ஒருபோதும் நம்பியதில்லை
விழிநீரில் ஓய்வு கொஞ்சமுமில்லை
கதியின்றி நிற்குமிந்த அபலைக்கு
கைகொடுக்க கடவுளின்றி  யாருமில்லை...

பலிவாங்கும் எண்ணமெனக்கில்லை -உன்னையினி
பார்க்கும் வலிமையும் மனதிலில்லை
களிப்புடன் என்றென்றும் நீர்வாழ -கடவுளிடம்
கையெந்துவதை தவிர வேறுவேலையில்லை...

















காற்றின் கண்ணீர்

மரத்தை வெட்டி
வீட்டை உருவாக்கினோம்
வீட்டை கட்டி ஏன்
மரத்தை உருவாக்க
மறந்துபோகின்றோம்!!

Monday, September 22, 2014

‍‍உன் தாய்

நீ அழும்போது பார்த்து
முதலில் மகிழ்ந்த‌
ஒரே ஜீவன் ‍‍உன் தாய்
தன் பிரசவத்தின்போது!!

Wednesday, August 6, 2014

ஒருநாள் நானும் ஜெயித்திடுவேன் -தினகரன் வாரமஞ்சரியில் (19.10.2014)

விழுந்த இடத்தில் முளைத்திடுவேன்
விதியை துடைத்து எறிந்திடுவேன்
அழுத‌ நாட்களை மறந்திடுவேன்
அழகிய வாழ்வை நெய்திடுவேன்!

விழுத்திய மனிதரை மறந்திடுவேன்
விபத்தாய் எதையும் நினைத்திடுவேன்
தழும்பை பார்த்தே அழுதிடேன்
தரணியில் பெயரை நிலைத்திடுவேன்!

முயற்சி0யை  மனதில் இருத்திடுவேன்
முழுமனதாய் எதிலும் இறங்கிடுவேன்
உயர்ச்சியை மட்டும் விரும்பிடுவேன்
உலகமே எதிர்த்தாலும் நிமிர்ந்திடுவேன்!

வ(ழி)லிகளே வாழ்க்கையென உணர்ந்திடுவேன்
வருத்திய வழிகளை மறைத்திடேன்
ஒளியை பிடிக்க ஓடிடுவேன்
ஒருநாள் நானும் ஜெயித்திடுவேன்!!

Sunday, May 18, 2014

வசியமா வைத்திருக்கின்றாய்??

வசியமா வைத்திருக்கின்றாய் -உன்
வசந்தமான கண்களுக்குள்
உசிரையே வாங்குகின்றாய் -அந்த‌
உருட்டிவிளையாடும் கவிதைகளுக்குள்!!



பூக்களை பரிசளியுங்கள்

கத்தி(க்)கொண்டு வருபவனுக்கு
பூக்களை பரிசளியுங்கள் -சத்தமேயில்லாமல்
புன்னகையோடு திரும்பிசெல்வான்!!




Saturday, May 17, 2014

கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டன...

நாம் சென்றுவந்த பாதைகள்
நமக்காக காத்திருந்த காற்றுவெளி
நம்மை வரவேற்ற பூந்தோட்டம் -எல்லாமே
அவசரத்தந்தி அனுப்பிவைத்து
காத்துக்கிடக்கின்றது
கதவுகளனைத்தும் மூடப்பட்டுவிட்டனவென்பதனை
அறியாமலேயே...!!



Friday, May 16, 2014

தமிழ் லீடர் இணையத்தில்... (14.05.2014) தாக்கமெல்லாம் பூக்களென்று!!

http://tamilleader.com/?p=33415



உருண்டுவிழும் ஆலங்கட்டியாய்
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது
இயலாமைகளை சுட்டிக்காட்ட‌
இமையிதழ்களில் கதறுவதே
இவளின் வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை
வெறும் ஏமாற்றங்களிலும்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்
அன்பெனும் முகமூடிதரித்த‌
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது
‘நம்பிக்கை’யென்று
பயணங்களுக்கு மட்டுமுதவும் பாதணியாய்‍ அவளை
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட‌
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்
இனியவள் வாசலுக்குள்
கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும்
காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி
தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில்
தாக்கமெல்லாம் பூக்களென்று!!

ஊடறு இணைய இதழில்... (14.05.2014) பிரிந்து செல்வதில் பிழையென்ன???

http://www.oodaru.com/?p=7424


த.எலிசபெத்(இலங்கை)
ஒத்துப்போகவில்லையெனில்
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???
சீர்வரிசைகளென்று தந்தையின்
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???
பத்துமாதம் சுமந்துபெற்ற பிள்ளை
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???
அலுவலகத்திற்கு ஒரு(வன்)த்தி
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???
பிந்திய சிலநாட்களில்
எந்தனின் தலையெழுத்தென்னவென‌
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???

Tuesday, May 13, 2014

நிர‌ந்தமில்லை!!

தீயவர்களின் வெற்றியும்
நல்லவர்களின் தோல்வியும்
நிர‌ந்தமில்லை!!

முகநூல் காதலெல்லாம்

முகம்பார்த்த காதலே
முழுக்குப்போடும் காலத்தில்
முகநூல் காதலெல்லாம் காதலா
முகவரியற்றுப்போவது தேவையா??


இதற்குப்பெயர்தானோ காதல்??

அன்னையாக இருப்பேனென்றவனுக்கு -வெறும்
புண்களை மட்டுமே கொடுக்கமுடிந்தது
தன்னையே அன்பாக்குவேனென்றவனுக்கு -ஏனோ
கண்ணீரையே இலகுவாக தரமுடிந்தது

இதற்குப்பெயர்தானோ காதல் உலகில்
இதனைத்தானோ அன்பென்கின்றார்கள்???




Wednesday, May 7, 2014

பிரிந்து செல்வதில் பிழையென்ன???

>>>>>>>>        >>>>>>>>>              >>>>>>>>              >>>>>>>

ஒத்துப்போகவில்லையெனில்
விட்டு விலகுதலில் தவறேது
பத்துத்திங்கள் கழித்து
அத்துக்கொண்டு செல்வதிலும்
பித்துக் கொ(ல்)ள்ளும்வரை
பிதற்றித்திரிவதிலும்
பிரிந்து செல்லுதலில் தவறேது???

சீர்வரிசைகளென்று தந்தையின்
மார்வலியை அதிகப்படுத்தாது
ஊர்வாயில் விரல்வைக்கவென்று
தேர்மீது அலங்காரமிடாது
வார்த்தைகள் வளர்த் ததனால் -கண்ணீர்களை
சேர்த்தெவரையும் வதைக்காது
பிரிந்து செல்வதில் தவறேது???

பத்துமாதம் சுமந்துபெற்ற பிள்ளை
தத்தித்தவழ்ந்து நடக்குந்தரு வாயில்
புத்திமாறி புதியவழி தேடுமவர்களோடு
கத்திச்சண்டையிடுவதிலும் -வாய்
பொத்தியழுது ஜீவியத்தை
நித்திலத்தில் தொலைப்பதிலும்
பிரிந்து செல்வதில் தவறேது???

அலுவலகத்திற்கு ஒரு(வன்)த்தி
அழகாக இருந்தாலோ அவ(ன்)ள்
திறமையில் என்னைவிட
தினுசாக மிளிர்ந்தாலோ
அனுதினமதை சுட்டிக்காட்டி
அணுவணுவாய் நமைகொல்லும்
ஆட்கொள்ளி வருவதற்கும் -இப்போதே
பிரிந்து செல்வதில் பிழையென்ன???


பிந்திய சிலநாட்களில்
எந்தனின் தலையெழுத்தென்னவென‌
ஏங்கியே தவிக்காது மண்ணில்
உதித்ததே பாவமென புலம்பாது
விதியினை நொந்து விதவிதமாய் கண்ணீர்
வடித்தழாது இப்போதே
பிரிந்துவிடுதல் நலமன்றல்லவா???




ஊடறு இணைய இதழில் எனது காதலுக்கு கண்ணில்லையென்று?? என்ற கவிதை (07.05.2014)



காதலிக்கவென்றால் ஒரு
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ
அழகிருக்கனும் கொஞ்சம்
அந்தஸ்துமிருக்கனும்
படித்திருக்கனும் லேசாய்
பளபளப்புமிருக்கனும்
தொழிலிருக்கனும் அதிலும்
கொழுத்த வரவிருக்கனும்
மெலிவாயிருக்கனும் மேனி
பொழிவாயுமிருக்கனுமாம்
ம்ம்ம்ம்
இதுக்குத்தான் சொன்னார்களோ
காதலுக்கு கண்ணில்லையென்று??
அப்போ
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்
அப்படியென்றால்
எதனை காதலிக்கின்றார்கள்??

Monday, May 5, 2014

தமிழ்லீடர் இணைய இதழில் எனது கவிதை (04.05.2014)

http://tamilleader.com/?p=32738

மணித்தியாலங்களோ
இருபத்துநான்கு -உனை
மனதுக்குள் நினைப்பதோ
நொடிகளின் எண்ணைக்கை
வேறு சிந்தைகள் கடந்தாலும்
மாறாக எதனைச் செய்தாலும்
ஆறாக ஓடுவதென்னவோ
மாறாத உன் ஞாபகந்தான்
அன்றாடங்களின் கடக்கும்
ஆயிரம் அதிசயங்கள் இருக்க‌
வென்று கொண்டிருப்பதென்னவோ
நினதான நினைவுகளே
எதிர்ப்புக்கள் எனக்கெதிராய்
எழும்பிவந்த போதெல்லாம்
எடுத்தெறிந்து விடத்தானெத்தனித்தேன்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்ததென்னவோ
எமக்குளுண்டான நேசம்மட்டுமே
அது என்னவோ
இங்குமட்டுந்தான்
விலக நினைக்கும்போதெல்லாம்
விடாமல் ஒட்டிக்கொள்வதும் நினைவுகளில்
விடாப்பிடியாய் கட்டிக்கொள்வதும்…
ஒன்றே தெய்வமென்றால்
காதலும் ஒன்றல்லவோ
ஒருவனே தேவனென்றால்
ஒருவருக்கு ஒருவரன்றோ
காத(லி)லன்
காதலுக்கு சாட்சியாய்
காத்துக்கிடக்கின்றது -நம்
காதல்
நாளைய‌
சரித்திரத்தை நிரப்பிவிட‌
காதல் ஆழமானதென்று!!

வலிகள்- வலிமை

கற்றுத்தந்த பாடங்கள் மிகவும்
வலிகள் நிறைந்தவை
கற்றுக்கொண்ட பாடங்களோ அதிகம்
வலிமை பெற்றவை!!


Friday, May 2, 2014

அதிகம் மென்மைவாய்ந்தது!!

மனிதனுக்குள் இருக்கின்ற மிருகம் மிகவும் பயங்கரமானவன்
மிருகத்துக்குள் இருக்கும் மனிதமோ அதிகம் மென்மைவாய்ந்தது!!